நுரையீரலை க்ளீன் பண்ணும் டிரிங்க்... சாதம் வடித்த தண்ணில இந்த 2 காய் சேருங்க: டாக்டர் நித்யா
ஊட்டச்சத்து குறைபாடு, புகை பிடித்தல், மது, அதிக மாசுபாடு அடைந்த காற்றை சுவாசித்தல், சுவாச மண்டலத்திற்கு ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய பணிகள், நோய்கள் ஆகியவற்றால் பாதிப்படைகிறது.
ஊட்டச்சத்து குறைபாடு, புகை பிடித்தல், மது, அதிக மாசுபாடு அடைந்த காற்றை சுவாசித்தல், சுவாச மண்டலத்திற்கு ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய பணிகள், நோய்கள் ஆகியவற்றால் பாதிப்படைகிறது.
நாம் பிறந்ததிலிருந்தே சுவாசிக்கிறோம். ஒற்றை உயிரணு அமீபா முதல் பல செல் விலங்குகள் வரை ஒவ்வொரு உயிரினமும் சுவாசிக்கிறது. நுரையீரல் என்பது மனித சுவாச மண்டலத்தின் சிறப்பு பகுதி. இது நம் வாழ்வின் கடைசி கணம் வரை தொடர்ந்து செயல்படுகிறது.
Advertisment
நுரையீரல்கள் மெல்லிய சவ்வுகள் மற்றும் மூச்சுக்குழாய்கள் எனப்படும் சிறிய குழாய்களால் கட்டமைக்கப்பட்டுள்ளன. இங்கே காற்று சிற்றறைகள் எனப்படும் பலூன் போன்ற அமைப்பு மற்றும் ரத்த நுண்குழாய்களின் வலையமைப்பையும் உள்ளடக்கியது. இவை வாயுக்களின் பரிமாற்றத்திற்காக நுரையீரலின் பரப்பளவை அதிகரிக்கிறது.
இவ்வளவு வேலைகளையும் செய்யும் நுரையீரலின் நோய் எதிர்ப்புத் திறனுக்கு உணவும் பிரதான காரணியாக இருக்கிறது. அதே சமயம், ஊட்டச்சத்து குறைபாடு, புகை பிடித்தல், மது, அதிக மாசுபாடு அடைந்த காற்றை சுவாசித்தல், சுவாச மண்டலத்திற்கு ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய பணிகள், நோய்கள் ஆகியவற்றால் நுரையீரல் பாதிப்படைகிறது.
மிஸ்டர் லேடீஸ் யூடியூப் சேனலில் டாக்டர் நித்யா நுரையீரல் சம்பந்தபட்ட பிரச்னைகளில் இருந்து வெளியே வருவதற்கும், நுரையீரலை பாதுகாப்பதற்கும், நுரையீரல் கழிவுகள் வெளியேற, சில குறிப்புகளை பகிர்ந்து கொண்டார்.
Advertisment
Advertisements
அதன்படி, சாதம் வடித்த கஞ்சியை, அடுப்பில் வைத்து சூடாக்கவும். இதில் 2,3 ஜாதிக்காய், மாசிக்காய் சேர்த்து கொதிக்க விடவும். 10 நிமிடம் கொதித்த பிறகு, அதை நன்கு காயவைக்கவும். இதை பொடித்து வைத்துக் கொள்ளலாம். அல்லது தேவைப்படும் போது, பசும்பாலில் உரசி சாப்பிடலாம்.
நுரையீரலில் அதிக பிரச்னை, சளி, மூச்சு விடுவதில் சிரமம், பேசும் போது பிரச்னை இருந்தால், இதை எடுத்து பசும்பால் துளிதுளியாக சேர்த்து நன்கு உரசி, நாக்கில் தொட்டு வைக்கலாம். இல்லை எனில் இதை பொடி செய்து பசும்பாலில் கலந்து குடிக்கலாம், என்று டாக்டர் நித்யா அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.