/indian-express-tamil/media/media_files/2025/08/13/madhampatty-2025-08-13-19-28-02.jpg)
சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி உடன் கோவை தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றது நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது. அண்மையில், மாதம்பட்டி ரங்கராஜூ உடன் திருமணமாகி விட்டதாகவும், 6 மாதங்கள் கர்ப்பமாக உள்ளதாகவும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பதிவிட்டது இணையத்தில் பேசுபொருளானது.
கோவைக்கு அருகிலுள்ள மாதம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜ். 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான இவர், அதைத் தொடர்ந்து 'பென்குயின்' படத்திலும் நடித்தார். சினிமாவில் நடித்திருந்தாலும், அவரைப் பிரபலமாக்கியது அவரது சமையல்தான். சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் சமையல் செய்து அசத்தியவர் ரங்கராஜ்.
தற்போது, 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியிலும் நடுவராகப் பங்கேற்று வரும் மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஸ்ருதி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். அவரது முதல் மனைவி ஸ்ருதி, ஒரு வழக்கறிஞர். இந்தச் சூழ்நிலையில், அண்மையில் மாதம்பட்டி ரங்கராஜின் காஸ்டியூம் டிசனைரான ஜாய் கிரிசில்டா, மதமபட்டி ரங்கராஜின் மனைவி என்று கூறி திருமண புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
முதல் மனைவி உடன் விவாகரத்து செய்யாமல் 2 ஆம் திருமணம் செய்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்ற தனியார் நிகழ்வில் முதல் மனைவி ஸ்ருதி உடன் ரங்கராஜ் பங்கேற்க, இணையத்தில் பலவிதமாக கருத்து பதிவாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்று அருகருகே அமர்ந்திருந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவே இல்லை.
ஸ்ருதி ஒரு பக்கமும், ரங்கராஜ் ஒரு பக்கமும் திரும்பி அமர்ந்திருக்கின்றனர். இதனிடையே, சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஜாய் கிரிசில்டா இதுவரை இதற்கு தனது பதில் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.