மதுரை, தமுக்கம் மைதானத்தில் வரும் 4-ஆம் தேதி அரசு சித்திரை பொருட்காட்சி தொடங்குகிறது. சித்திரைத் திருவிழாவையொட்டி இந்தப் பொருட்காட்சி நடைபெறுகிறது.
வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம், சுவாமி வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக ஏராளமான பக்தர்கள் மதுரையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். சித்திரைத் திருவிழாவுக்காக சுமார் 20 லட்சம் பக்தர்கள் இந்த ஆண்டு வரவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மே 4-ஆம் தேதி அரசு சித்திரை பொருட்காட்சி தொடங்கிகிறது. 45 நாட்கள் நடைபெறும் இந்தப் பொருட்காட்சியில் 35-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறுகின்றன. மேலும், உணவு வகைகளும் இங்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
எனவே, இந்தப் பொருட்காட்சியை காண ஏராளமான பொதுமக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.