சித்திரை ஏகாந்த சேவை: வைர வைடூரியத்தில் ஜொலித்த கள்ளழகர்

இந்த தனித்துவமான தரிசனத்தில், கள்ளழகர் பெருமான் தலை முதல் பாதம் வரை நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார்.

இந்த தனித்துவமான தரிசனத்தில், கள்ளழகர் பெருமான் தலை முதல் பாதம் வரை நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார்.

author-image
WebDesk
New Update
madurai Azhagar

Madurai

தென் இந்தியாவின் ஆன்மீகப் பொக்கிஷமாகத் திகழும் மதுரை மாவட்டத்தில், 108 வைணவத் திருத்தலங்களுள் சிறப்புமிக்கதாகப் போற்றப்படுவது திருமாலிருஞ்சோலை என்னும் அழகர்மலை திவ்ய தேசம். இந்த புண்ணிய பூமியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கள்ளழகர் பெருமாள், இன்று பக்தர்களுக்கு ஓர் அரிய, அபூர்வ தரிசனத்தை வழங்கினார்.

Advertisment

ஸ்ரீ சுந்தரவல்லித் தாயாரின் அருட்கடாட்சத்துடன் வீற்றிருக்கும் கள்ளழகர் பெருமான், 2025 ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஏகாந்த சேவையையொட்டி, வாடிப்பட்டி அருகே உள்ள வையாபுரிநாதர் வீரராகவப் பெருமாள் கோவிலில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

Madurai

இந்த தனித்துவமான தரிசனத்தில், கள்ளழகர் பெருமான் தலை முதல் பாதம் வரை நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். ஜொலிக்கும் ரத்ன கிரீடம், ரத்ன திருமண் காப்பு, ரத்னங்களால் இழைக்கப்பட்ட சங்க சக்கரம், மின்னும் ரத்ன குண்டலங்கள், ரத்ன ஹஸ்த கவசங்கள், பல்வேறு ரத்ன பதக்கங்கள், ரத்ன ஒட்டியாணம், இடுப்பில் அழகுற செருகப்பட்டிருந்த குறுவாள், ரத்ன மாலைகள் மற்றும் ரத்ன பாத கவசங்கள் என அனைத்தும் அவரது திருமேனிக்கு மேலும் பேரழகை சேர்த்தன.

Advertisment
Advertisements

Madurai

சந்தனக் காப்புடன், பலவிதமான வண்ணமயமான நறுமண மலர்மாலைகளும் அணிவிக்கப்பட்டிருந்ததால், கள்ளழகரின் தோற்றம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

"சுந்தரத்தோளுடைய கள்ளழகர்" என்ற திருநாமத்திற்கு ஏற்ப, அழகுமிகு அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கள்ளழகர், பக்தர்களின் இதயங்களை கொள்ளை கொண்டு, ஆனந்தத்தில் ஆழ்த்தினார். இந்த அபூர்வ தரிசனம், அழகர்மலையின் பெருமையையும், கள்ளழகர் மீதான பக்தர்களின் அளவற்ற அன்பையும் பறைசாற்றுவதாக அமைந்தது.

Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: