/indian-express-tamil/media/media_files/2025/05/02/5ixKeo4sALhzxvVe6EAl.jpg)
சித்திரை திருவிழாவின் நான்காம் நாளான மே 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை மீனாட்சி அம்மன் பாவக்காய் மண்டபம் சென்று திரும்பும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதை ஒட்டி, மதுரை நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என காவல் துறை அறிவித்துள்ளது.
அன்று காலை, மீனாட்சி அம்மன் சுவாமி புறப்பட்டு ஜடாமுனி கோயில் சந்திப்பு, தெற்கு ஆவணி மூல வீதி, மறவர் சாவடி, சின்னக்கடை தெரு, தெற்குமாரட், வடமலையான் சந்திப்பு வழியாக ஜெயவிலாஸ் சந்திப்பு அருகிலுள்ள பாவக்காய் மண்டபம் செல்வார். பிற்பகல் 3 மணிக்கு, அதே வழியாக திரும்பி, சொக்கப்ப நாயக்கர் தெரு, சித்திரை வீதிகள் வழியாக கோயிலுக்குச் செல்வார்.
இந்த நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, பின்வரும் பகுதிகளில் வாகன நிறுத்தம் அனுமதிக்கப்படாது. மேலும், பாவக்காய் மண்டப நிகழ்ச்சி நடைபெறும் போது, அவனியாபுரம் வழியாக நகர் நோக்கி வரும் வாகனங்கள் ஜெயவிலாஸ் சந்திப்பை நோக்கி செல்ல முடியாது. அவை லிட்டில் டைமண்ட் பள்ளி, ஜெய்ஹிந்த்புரம் ரோடு, ஜீவா நகர் சந்திப்பு வழியாக செல்ல வேண்டியுள்ளது.
அதனால் சிந்தாமணி, கீரைத்துறை வழியாக ஜெயவிலாஸ் சந்திப்பு நோக்கி வரும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. தெற்குவாசல் சந்திப்பிலிருந்து என்.எம்.ஆர் பாலம் வழியாக செல்லும் வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன. இருசக்கர, இலகுரக வாகனங்கள் மீனாட்சி தியேட்டர் பள்ளம் வழியாக வில்லாபுரம் செல்ல வேண்டும்.
கனரக வாகனங்கள் முத்துப்பட்டி ரோடு, அவனியாபுரம் வழியாக அருப்புக்கோட்டை செல்லலாம். அவனியாபுரம் மற்றும் தெற்குவாசல் வழியாக வரக்கூடிய பக்தர்கள், குறித்த பகுதிகளில் சாலையோரம் வாகனங்களை நிறுத்தலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் இந்த போக்குவரத்து மாற்றங்களை கவனத்தில் கொண்டு, தங்களது பயண திட்டங்களை அமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.