Advertisment

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எளிதில் செல்ல கியூ.ஆர்.கோடு: மதுரை போலீசார் நடவடிக்கை

இந்த கி.யூ.ஆர். கோடு மதுரை நகரின் அனைத்து காவல் சோதனைச் சாவடிகளிலும், பிற முக்கியசாலைகளிலும் மற்றும் நகருக்குள் மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு செல்லக்கூடிய ஒவ்வொரு பாதையின் நுழைவு வாயிலிலும் அமைக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Madurai City Police QR Code for vehicles parking Meenakshi temple devotees Tamil News

கி.யூ.ஆர். கோடுனை பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது மொபைல் போனில் ஸ்கேன் செய்து. மேற்படி வாகன நிறுத்தத்திற்கு எளிதாக சென்று நிறுத்திக் கொள்ளலாம் .

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக் கான பக்தர்களும் பொதுமக்களும் வருகை புரிகின்றனர். இதில் வருகை தரும் பக்தர்களில் வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள் தங்கள் வாகன நிறுத்தத்தினை கண்டறிவதில் சிரமங்களுடன் வாகன நிறுத்தத்தை தேடிச் செல்லும் நிலை தற்சமயம் உள்ளது.

Advertisment

இவர்கள் பயன்பெறும் வகையில் எளிதில் வாகன நிறுத்தத்திற்கு செல்லும் வண்ணம் புதியதாக மதுரை மாநகர காவல்து றையினரால் கி.யூ.ஆர். கோடு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கி.யூ.ஆர். கோடு மதுரை நகரின் அனைத்து காவல் சோதனைச் சாவடிகளிலும், பிற முக்கியசாலைகளிலும் மற்றும் நகருக்குள் மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு செல்லக்கூடிய ஒவ்வொரு பாதையின் நுழைவு வாயிலிலும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கி.யூ.ஆர். கோடுனை பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது மொபைல் போனில் ஸ்கேன் செய்து. மேற்படி வாகன நிறுத்தத்திற்கு எளிதாக சென்று  நிறுத்திக் கொள்ளலாம் . பின்பு அங்கிருந்து ஆட்டோக்கள் மற்றும் அரசு மினி பேருந்துகள் மூலமாக திருக்கோவிலுக்கு சென்று பயன்பெற மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment