மதுரை அம்மா திடலில் ஜூன் 22ஆம் தேதி நடைபெறவுள்ள மாபெரும் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு, இன்று (மே 28) பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் நிகழ்வு ஆன்மிக பிரம்மோற்சமாக நடைபெற்றது.
ஆன்றோர் மற்றும் சான்றோர் அருளாசியுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து முன்னணி மாநில தலைவர் திரு. காடேஸ்வரா சுப்பிரமணியம், தென்பாரத அமைப்பாளர் திரு. க. பக்தன், முன்னாள் மத்திய அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன், பாஜக மாநில அமைப்பு செயலாளர் திரு. கேசவ விநாயகம், இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் திரு. நா. முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
/indian-express-tamil/media/media_files/2025/05/28/96Ru4cz57Q0pdJlQCJ1r.jpg)
மேலும் மாநில துணைத்தலைவர் திரு. வி. பி. ஜெயக்குமார், பாஜக மாநில துணைத்தலைவர் பேராசிரியர் இராம. சீனிவாசன், பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்கப் பெருமாள் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் திரு. ச. ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பாஜக மற்றும் இந்து முன்னணியின் முக்கிய பொறுப்பாளர்கள், ஆதரவாளர்கள், மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மாநாடு நடைபெற உள்ள இடத்தில் பூமி பூஜையுடன் தொடங்கி, ஆன்மிக வளம் தேடும் இந்தப் பெருவிழா, பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.