மூன்று மொழிகளில் ரயில்வே போர்வை, தலையணை உறைகளில் தகவல்கள் - மதுரை ரயில்வே கோட்டம் புதிய உத்தரவு!

மூன்று மொழிகளில் ரயில்வே போர்வை, தலையணை உறைகளில் தகவல்கள் இருக்க வேண்டும் என மதுரை ரயில்வே கோட்டம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

மூன்று மொழிகளில் ரயில்வே போர்வை, தலையணை உறைகளில் தகவல்கள் இருக்க வேண்டும் என மதுரை ரயில்வே கோட்டம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

author-image
WebDesk
New Update
மதுரை

மதுரை ரயில்வே கோட்டம் புதிய அறிவிப்பு

மதுரை ரயில்வே கோட்டம் முக்கியமான தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. இதன் அடிப்படையில், இனி ரயில்வேயின் போர்வை மற்றும் தலையணை உறைகளில் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தகவல்கள் அச்சிடப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதுவரை, ரயில்களில் பயணிகளுக்காக வழங்கப்படும் போர்வை மற்றும் தலையணை உறைகளில் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலேயே தகவல்கள் இருந்தன. இதனால், தமிழ்நாட்டில் பயணம் செய்யும் தமிழ் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மதுரை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட 13 ரயில்களில், குளிர் சாதன வசதியுடன் இயங்கும் பெட்டிகளில் வழங்கப்படும் போர்வை மற்றும் தலையணை உறைகளில் இனி மூன்று மொழிகளிலும் தகவல்கள் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு ஒப்பந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக, ரயில்களில் பயணிகள் வசதிக்காக இரு வெள்ளைப் போர்வைகள் மற்றும் தலையணைகள் பழுப்பு நிற காகித உறைகளில் வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வந்தது. இப்போது அந்த உறைகளில் தமிழும் இடம்பெற உள்ளதை ரயில்வே அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Advertisment
Advertisements

இந்த தீர்மானம் தமிழ்நாட்டு பயணிகளிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏனெனில், நீண்ட காலமாக தமிழ் மொழியை ரயில்வே போர்வை உறைகளில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துவந்தது.

indian railway Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: