இந்திய ரயில்வேயின் கிளை நிறுவனமான இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) சூப்பர் டூர் பிளானை வெளியிட்டுள்ளது.
இந்த திட்டம் மூலம், மதுரை-ராமேஸ்வரம்-தனுஷ்கோடி போன்ற தென்னிந்தியாவின் முக்கிய ஆன்மிக மற்றும் வரலாற்று இடங்களை சுற்றிப் பார்க்க சிறந்த வாய்ப்பு கிடைக்கும். இந்தப் பயணம் பற்றிய முழு விபரங்களை இந்தப் பதிவில் காணலாம்.
பயண திட்டம் என்ன?
முதல் நாள் (வெள்ளி):
சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் காலை 5 மணிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (20627) ரயிலில் பயணம் தொடக்கம்.
மதுரை ரயில்நிலையத்தில் காலை 10:38 மணிக்கு வருகை. மதுரை அருங்காட்சியகம், திருமலை நாயக்கர் மஹால் மற்றும் மீனாட்சி அம்மன் கோயில் சுற்றி பார்க்க முடியும் மதுரையில் இரவு தங்கும் வசதி.
2-ம் நாள் (சனி): காலை உணவுக்குப் பிறகு ராமேஸ்வரத்திற்கு பயணம். டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவிடம், ராமர் பாதம், ஐந்து முக அனுமன் கோயில் மற்றும் தனுஷ்கோடி பார்வை. ராமேஸ்வரத்தில் இரவு தங்கும் வசதி.
3-ம் நாள் (ஞாயிறு): காலை ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம். காலை உணவுக்குப் பிறகு மதுரைக்கு திரும்பி, மதுரை ரயில் நிலையத்தில் பிற்பகல் 2 மணிக்கு இறக்கம். மாலை 5:05 மணிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (20628) ரயிலில் சென்னை எழும்பூருக்கு பயணம். இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூரில் பயணம் முடிவடையும்.
பயண திட்டத்தின் விலை என்ன? 2 இரவுகள் 3 நாட்கள் பேக்கேஜின் விலையானது, 3 நபர்கள் சேர்ந்து தங்குமிடம் வேண்டுமென்றால் ரூ.13,260 மட்டுமே ஆகும். 2 பேராக தங்குவது என்றால் ரூ.15, 700 செலவாகும். தனியாக தங்குமிடம் வேண்டுமென்றால் ரூ.25,900/- ஆகும். படுக்கை வசதியுடன் கூடிய குழந்தைகளுக்கான மொத்த பேக்கேஜ் செலவு ரூ.9,460/- ஆகும். படுக்கை வசதி தேவைப்படாத குழந்தைகளுக்கான பேக்கேஜிங் விலை ரூ.7,750ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
என்னென்ன அடங்கும் ? இந்த பேக்கேஜில் உணவு, தண்ணீர், போக்குவரத்து, வழிகாட்டிகள் ஆகியவற்றுக்கான செலவுகள் அடங்கும். உணவு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட உணவுதான் பரிமாறப்படும். விருப்பத்தின்படி வழங்கப்படாது. வேறு உணவு சாப்பிட விரும்பினால் தனிப்பட்ட செலவில் சேரும்