மதுரையில் ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலை...முன்விரோதம் காரணமா என்ற கோணத்தில் விசாரணை

மதுரையில் ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் முன்விரோதம் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரையில் ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் முன்விரோதம் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
மதுரை ரவுடி கொலை

மதுரையில் ரவுடி கொலை

மதுரை தனக்கன்குளத்தில் திமுகவின் முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமியின் ஆதரவாளர் காளீஸ்வரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவமானது இரண்டு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின் விளைவாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

கொலை செய்யப்பட்ட காளீஸ்வரனின் உடலை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், காளீஸ்வரனின் ஆதரவாளர்கள் ஆம்புலன்ஸை சேதப்படுத்தியுள்ளனர். இதனால், அங்கு பதட்டமான சூழல் நிலவியதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காளீஸ்வரன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக காளீஸ்வரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: