மகா சிவராத்திரி என்பது சிவபெருமானை போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி விரதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தேய்பிறை சதுர்த்தசி நாளை சிவராத்திரி என்கிறோம். மகாராத்திரி என்பது சிவன் படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற வேலைகளை செய்வதால் அந்த நாளை சிவராத்திரி என்கிறோம்.
ராத்திரம் என்ற சொல்லுக்கு அறிவு என்ற பொருள் உண்டு. சிவபெருமானை உணர்த்தும் அறிவை தரக்கூடிய ராத்திரி மகா சிவராத்தியாக இருக்கும். சிவபெருமானுக்கு எத்தனையோ திருநாமங்கள் உள்ளன. அதிலும் மகாதேவன் என்ற திருநாமம் எல்லா கடவுள்களின் தலைவன் என்று அர்த்தம். நம்முடைய கர்ம வினைகளில் இருந்தும், எல்லா துன்பத்தில் இருந்து விடுவிக்க வந்தவனே சிவன். வருடம் முழுவதும் சிவனை வழிபட்டு விரதம் இருக்காவிட்டாலும், அதை நாம் சிவராத்திரி அன்று செய்தால் ஒருவருடம் முழுவதும் சிவனுக்கு பூஜை செய்து வழிபட்ட பலன் கிடைக்கும். இரவு முழுவதும் கண்விழித்து வேண்டிக்கொண்டு அதிகாலையில் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வார்கள். சிவராத்திரிக்கு முந்தைய நாள் பக்தர்கள் ஒருவேளை மட்டும் சாப்பிடுவார்கள். அதன் பிறகு 4 கால பூஜை நடைபெறும்.
இதில் முதல் கால பூஜை பிரம்மாவும், இரண்டாம் கால பூஜை பார்வதியும், 3ம் கால பூஜை தேவர்களும், 4ம் கால பூஜையை மனிதர்கள் மற்ற உயிரினங்களும் மக்கள் வழிபட வேண்டும்.
மகா சிவராத்திரி ஆரம்பிக்கும் நேரம் மார்ச் 8ம் தேதி இரவு 8.20 மணி முதல் மார்ச் 9ம் தேதி 6 மணி சதுர்தசி திதி உள்ளது. இரவு 8.30 மணிக்கு மகா சிவராத்திரி பூஜை தொடங்க வேண்டும்.
நள்ளிரவு பூஜைக்கான நல்ல நேரம் 12.07 முதல் 12.56 வரை உள்ளது. முதல் கால பூஜை நேரம் : மாலை 6.25 முதல் இரவு 9.28 வரை, இரண்டாம் கால பூஜை நேரம் 9.28 முதல் 12.31 காலை வரை, முன்றாம் கால பூஜை 12.31 அதிகாலை 3.34 வரை , நான்காம் கால பூஜை அதிகாலை 3.34 மணி முதல் 6.37 வரை உள்ளது.
விரதம் இருக்கும் முறை
சிவராத்திரி அன்று அதிகாலை எழுந்து, புனித நீராடி, வீட்டை சுத்தம் செய்து, விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். பின்னர் பிள்ளையாரை விரதம் தடைபடாமல் இருக்க வேண்டிக்கொண்டு. சிவனுக்கு அபிஷேகம் செய்து, சிவனின் மந்திரத்தை உச்சரித்து வணங்கலாம். ஓம் நமச்சிவாய என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். ஹர ஹர சிவனே என்றும் நாம் சொல்லலாம். விரதம் கடைபிடிக்கும் நேரத்தில் இரவு, பகலில் சாப்பிடாமல் இருக்க வேண்டும். பால், பழத்தை சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“