மகா சிவராத்திரி அன்று என்ன விரதம் இருக்க வேண்டும். எப்படி விரதம் இருக்க வேண்டும் என்றெல்லாம் பலருக்கும் சந்தேகம் இருக்கும். அப்படி விரதம் இருக்க விரும்புபவர்களின் சந்தேகங்களை பூர்த்தி செய்ய ஆத்ம ஞான விரதம் யூடியூப் பக்கத்தில் தேச மங்கையர்க்கரசி கூறியிருப்பதாவது,
முதல் நாள் 25ஆம் தேதி பிரகாஷ் பிரதோஷம் வருகிறது. இது தோஷங்கள் எல்லாம் விளக்கக்கூடிய ஒரு அற்புதமான நாளாகும். மாதந்தோறும் நாம் கொண்டாட கூடிய விரத நாளாகவும் பிரதோஷம் அமைந்துள்ளது.
பிரதோசம் அன்று விரதம் இருக்க விரும்புபவர்கள் காலையிலேயே இதை ஆரம்பித்து விட வேண்டும். பிரதோஷம் அன்று காலையில் சாமி தரிசனம் முடித்து விரதம் மேற்கொள்ளலாம். 25ஆம் தேதி மாலையில் உணவு எடுத்துக் கொள்ளலாம்.
பொதுவாக பிரதோஷம் சிவராத்திரிக்கு முதல் நாள் இரவை எளிமையான உணவாக சாப்பிட்டு விரதம் இருந்து விரதம் முடிந்து 25ஆம் தேதி மாலை நல்ல உணவு எடுத்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
அதேபோல 26 ஆம் தேதி காலையிலிருந்து சிவராத்திரி விரதம் ஆரம்பிக்கலாம். அதே மாதிரி சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் 25ஆம் தேதி இரவு எளிமையான உணவு சாப்பிட்டுவிட்டு 26 ஆம் தேதி பட்டினி விரதம் இருக்கலாம்.
26 ஆம் தேதி சிவராத்திரி ஆரம்பித்துவிடும் அன்று மவுன விரதமும் ஸ்பெஷலான ஒன்றாகும். அதற்கு 26 ஆம் தேதி காலை எழுந்ததிலிருந்து மவுனமாக இருக்க வேண்டும். பட்டினம் இருப்பவர்கள் காலையலேயே விரதத்தை ஆரம்பிக்கலாம்.
காலையில் குளித்துவிட்டு அபிஷேகம் வழிபாடு செய்து திருவாசகம், சிவபுராணங்களை ஆரம்பிக்கலாம். கோயில் செல்ல முடியாதவர்கள் கூட வீட்டில் இருந்து விரதம் கடைபிடிக்கலாம் பால், தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம். மாலையில் வீட்டில் இருக்கக்கூடிய சிவபெருமானின் உருவப்படத்திற்கு சிலைக்கு வழிபாடு செய்யலாம்.
பூஜை ஆரம்பிக்கும் முன் ஒரு முறை குளிக்க வேண்டும். வீட்டில் இருக்கிற எளிமையாக சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யலாம். அதற்கு கருங்கல், உலோகத்தால் ஆன சிலைகளுக்கு அபிஷேகம் செய்யலாம்.
சிவராத்திரி அன்றூ மொத்தம் 4 காலம் உள்ளது. முதல் காலம் இரவு 7:30 மணிக்கும் இரண்டாம் காலம் இரவு 10.30க்கும் மூன்றாம் காலம் நள்ளிரவு 12 மணிக்கும் நான்காம் காலம் அதிகாலை 4:30 மணிக்கு ஆரம்பிக்கிறது. இந்த நான்கு காலங்களும் வெவ்வேறு கோயில்களில் ஒவ்வொரு மாதிரி அமைந்து இருக்கும்.
உங்களுக்கு அருகில் உள்ள கோயிலில் கடைபிடிக்கப்படும் காலத்தை பின்பற்றி உங்கள் நேரத்தை வகுத்துக் கொள்ளவும். சிவபெருமானுக்கு பிடித்த வில்வம் இலை, மலர்கள் வைத்து அபிஷேகம் செய்யலாம்.
கோயிலில் வழிபாடு செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே சிவன் விக்ரகம் வைத்து வழிபாடு செய்யலாம் அபிஷேகம் செய்யலாம்.
முதல் காலத்தில் பாலபிஷேகம் செய்து பாசிப்பருப்பு பொங்கல் செய்யலாம். இரண்டாம் காலத்தில் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து இனிப்பு பாயாசம், கற்கண்டு பொங்கல் செய்யலாம்.
மூன்றாம் காலம் சிவபெருமானுக்கு முக்கியமான காலமாகும். அப்போது தேனால் அபிஷேகம் செய்து எள் சாதம் செய்து படைக்கலாம். நான்காவது காலம் கரும்பு சாற்றினால் அபிஷேகம் செய்து சுத்த சாதத்தில் நெய் ஊற்றி படைக்கலாம்.
சிவராத்திரி விரத முறை & வழிபடும் முறை | 4 கால பூஜை முறை, வழிபாடு, அபிஷேகம், | Sivarathri 2025
தூங்காமல் இருப்பவர்களுக்கு இந்த வழிபாடு துணையாக இருக்கும். நிறைய அபிஷேகம் செய்ய முடியாது அதற்கு ஏதோ ஒரு நெய்வேதியம் ஒரு அபிஷேகம் செய்யலாம். சிவராத்திரி அன்று திருவாசகம் படிக்கலாம்.
27 ஆம் தேதி காலையில் 6:00 மணிக்குள் தீபாரதனை செய்து சிவராத்திரி வழிபாட்டை முடித்து விட வேண்டும். குலதெய்வ கோயிலுக்கு செல்பவர்கள் விரதமாக இருக்கலாம். மலர்கள் தீபங்கள் அர்ச்சனைக்கு கொடுக்கலாம்.
வீட்டில் செய்ய முடியாதவர்கள் கூட வாங்கி கொடுக்கலாம். 26ஆம் தேதி இந்த வழிபாட்டை முடித்து 27 காலையில் நெய்வேதியம் சாப்பிடலாம். அதே மாதிரி பட்டினி விரதம் இருப்பவர்கள் கோயில்களில் கொடுக்கும் பிரசாதத்தை சாப்பிடலாம். சிவராத்திரி விரதத்தை 27 ஆம் தேதி காலையில் பூர்த்தி செய்யலாம் நன்றாக சாப்பிட்டுவிட்டு விரதத்தை பூர்த்தி செய்யலாம்.
26 இரவு சிவராத்திரி அன்று தூங்காமல் இருந்து 27 ஆம் தேதி காலையிலும் தூங்கக்கூடாது அடுத்த நாள் மாலை 6:00 மணிக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்துவிட்டு குடும்பம் செழிக்க நம் அனைத்து பிரார்த்தனைகளையும் முடித்து விட்டு இரவு 7 மணிக்கு படுத்து தூங்கலாம்.
முழுநேரம் கன்முழிக்க முடியாதவர்கள் இரவு 11.45 இல் இருந்து ஒரு மணி வரை கண் முழிக்கலாம். விரதம் இருக்க முடியாதவர்கள் அலுவலகத்திற்கு செல்பவர்கள் எல்லாம் 12 மணி ஒரு பத்து முதல் 15 நிமிடம் தியானம் செய்யலாம்.