21-ம் தேதி மகாளய அமாவாசை: பூஜை நடைமுறைகள், தர்ப்பண நேரம் இதுதான்!

தேச மங்கையர்கரசி அவர்கள் மகாளய அமாவாசையின் முக்கியத்துவம், தர்ப்பணம் செய்யும் முறை, படையல் போடும் நடைமுறைகள், அதற்கான உகந்த நேரம், மற்றும் அன்னதானத்தின் சிறப்புகள் குறித்து விளக்கினார்.

தேச மங்கையர்கரசி அவர்கள் மகாளய அமாவாசையின் முக்கியத்துவம், தர்ப்பணம் செய்யும் முறை, படையல் போடும் நடைமுறைகள், அதற்கான உகந்த நேரம், மற்றும் அன்னதானத்தின் சிறப்புகள் குறித்து விளக்கினார்.

author-image
WebDesk
New Update
desa mangayarkarasi

மகாளய அமாவாசை முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை மறந்தவர்களுக்காக ஒரு வாய்ப்பாக அமைகிறது. இது முன்னோர்களின் சாபம் அல்லது பாவம் நீங்க உதவுகிறது. பொதுவாக பெற்றோர்கள், தாத்தா, பாட்டி போன்ற முன்னோர்கள் நம்முடைய நன்மைக்காகவே விரும்புவார்கள், ஒரு கடமையை செய்யத் தவறினால் ஒரு மன வருத்தம் மட்டுமே இருக்கும், சாபம் இருக்காது என்று தேச மங்கையர்கரசி ஆத்மஞான மையம் யூடியூப் பக்கத்தில் கூறியுள்ளார்.

Advertisment

தர்ப்பணம் செய்தல்: காலையில் எழுந்து குளித்துவிட்டு முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுக்கலாம். இதை கோவிலில் அல்லது வீட்டிலேயே செய்யலாம். தர்ப்பணம் செய்தபின் அந்த எள் மற்றும் தண்ணீரை கால் படாத இடத்தில் அல்லது சிங்க்கில் ஊற்றிவிட வேண்டும்.

விரதம் மற்றும் படையல்: தர்ப்பணம் செய்தபிறகு இஷ்ட தெய்வத்தை வழிபட்டு விரதத்தை மேற்கொள்ளலாம். பட்டினியாக விரதம் இருக்க முடியாதவர்கள் எளிமையான பழங்கள் அல்லது பழச்சாறு எடுத்துக்கொள்ளலாம். மதியம் படையல் போடும் வரை விரதத்தை தொடரலாம். படையல் போடும்போது சாம்பார், வாழைக்காய், கீரை, பூசணிக்காய் போன்ற நாட்டுக்காய்கறிகளைப் பயன்படுத்தி சமைக்கலாம். முன்னோர்களுக்குப் பிடித்த சைவ உணவுவகைகளையும் சேர்த்து சமைக்கலாம். படையலை முன்னோர்களின் படத்திற்கு முன்பு வைக்க வேண்டும்.

வழிபாட்டிற்கான நேரம்: செப்டம்பர் 21 அன்று அமாவாசை முழுவதும் இருப்பதால், தர்ப்பணம் செய்வதற்கு காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை உகந்த நேரம். மதியம் படையல் போடுவதற்கு காலை 11 மணி முதல் 11:45 மணி வரையிலும், அல்லது மதியம் 1:35 மணி முதல் 2 மணி வரையிலும் உகந்த நேரம். 

Advertisment
Advertisements

மாற்று வழிபாடுகள்: பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் சமைக்க முடியாத நிலை ஏற்பட்டால், ஒரு காகத்திற்கு சாப்பாடு வைக்கலாம். முன்னோர்கள் காகத்தின் உருவில் வந்து ஆசீர்வாதம் வழங்குவார்கள். அன்றைய தினம் பசு, நாய், பூனை, புறா போன்ற ஜீவன்களுக்கு உணவு கொடுக்கலாம் அல்லது ஏழைகளுக்கு வயிறார சாப்பாடு வாங்கி கொடுக்கலாம். 

அன்னதானத்தின் முக்கியத்துவம்: அன்னதானம் செய்வது கர்ம வினைகளை நீக்கி, எதிர்காலத்தில் ஒரு பெரிய பொக்கிஷமாக அமையும். அன்றைய தினம் இரண்டு பேருக்காவது வயிறார சாப்பாடு வாங்கி கொடுக்க வேண்டும். இது முன்னோர்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய நன்றி கடன்.

மாலை வழிபாடு: மாலையில் வீட்டில் ஒரு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அல்லது கோயிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: