மலேசியா வாசுதேவன் 16 வயதினிலே படத்தில் இடம் பெற்ற ஆட்டுகுட்டி முட்டையிட்டு பாடலை பாடி புகழடைந்தவர். அவர் இளையராஜாவின் இசையில் அதிகமான பாடல்களை பாடி உள்ளார்.
மைகேல் மதன காமராஜன் படத்தில் ’பேர் வெச்சாலும் வைக்காம போனாலும் மல்லிவாசம்’, முரட்டுக்காளை படத்தில் ’பொதுவாக என் மனசு தங்கம்’, முதல் மரியாதை படத்தில் ’வெட்டி வேரு வாசம்’, ’பூங்காத்து திரும்புமா’, பன்னீர் புஷ்பங்கள் படத்தில் ’கோடை காலக் காற்றே’ உள்ளிட்ட பாடல்களை அவர் பாடி உள்ளார். இன்னும் இந்த பாடல்கள் பலரால் எல்லா காலத்திலும் கேட்கப்படும் ஒன்று.
மொத்தம் 8000 பாடல்களை மலேசியா வாசுதேவன் பாடி உள்ளார். மேலும் இவர் பூவே உனக்காக படத்தில் விஜய் உடன் நடித்துள்ளார். பலே பாண்டியா படத்தில் கடைசியாக பாடல் பாடினார். பாரதிராஜாவை தயாரிப்பாளர் ஒருவருக்கு மலாசியா வாசுதேவன் அறிமுகப்படுத்தி உள்ளார்.
டெல்லி டூ மெட்ராஸ் என்ற திரைப்படத்தில்தான் மலேசியா வாசுதேவன் முதல்முறையாக பாடினார். இவர் ஏ.ஆர்.ரகுமான் இசையிலும் பாடல் பாடி உள்ளார். கிழக்கு சீமையிலே உள்ள தென் கிழக்கு சீமையிலே பாடல் மிகவும் ஹிட்டான பாடல்.
’ஆசை நூறு வகை’ பாடல் இன்று வரை தங்களது பிளே லிஸ்டில் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். ஒரு பாடலை உணர்வோடு மக்களிடத்தில் கடத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல. அந்த யுக்தி இவருக்கு தெரிந்திருந்தது.
கமலுக்கும் ரஜினிக்கும் எ.பி.பி குரலுடன் பொருத்தம் இருந்தது. இப்படி இருந்தாலும் கல்யாணராமன் படத்தில் உள்ள தீபமொன்று பாடலும், தர்மயுத்தம் படத்தில் இரண்டு பாடல்களும் அனைவராலும் விருமப்பட்டது.இதுபோல ரஜினியின் முக்கிய பாடலான ’பொதுவாக என் மனசு தங்கம்’ பாடலும் இவரால் பாடப்பட்டது. இது ரஜினிக்கு மிகவும் அதிக புகழை தேடி கொடுத்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“