தினமும் காலையில் இந்த பொடி சேர்த்து பால் குடித்தால், அவ்வளவு புத்துணர்வாக, ஆரோக்கியமாகவும் இருக்கும்.
1 கப் பாதாம்
1 கப் முந்திரி
அரை கப் பிஸ்தா
2 துண்டு சுக்கு
2 துண்டு ஜாதிக்காய்
4 ஏலக்காய்
கால் ஸ்பூன் மிளகு
சில ரோஜா இதழ்கள்
அரை லிட்டர் பால்
கால் டீஸ்ன் மஞ்சள் பொடி
2 ஸ்பூன் நாட்டு சர்க்க்ரை
செய்முறை
பாதாம், முந்திரி, பிஸ்தா வறுத்து கொள்ள வேண்டும். இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். தொடர்ந்து அதே பாத்திரத்தில் சுக்கு, ஜாதிக்காய், மிளகு ஏலக்காய், காய்ந்த ரோஜா இதழ்கள் சேர்த்து வறுக்கவும். தொடர்ந்து இவை அனைத்துடன், மஞ்சள் பொடி, நாட்டு சர்க்கரை சேர்த்து பொடித்து கொள்ளவும். இந்த பொடியை நாம் 6 மாதம் வரை பயன்படுத்தலாம். தேவையான நேரத்தில் பாலை கொதிக்க வைக்கவும். தொடர்ந்து இதை 2 ஸ்பூன் பாலில் சேர்த்து கிளறி குடிக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“