Advertisment

தலைமுறையை தாண்டி நிற்கும் ஜேசுதாசின் இசைக்குடும்பம்... அடுத்து பாட வந்திருப்பது யார் தெரியுமா?

பேத்தியுடன் சேர்ந்து தாத்தாவான கே.ஜே.ஜேசுதாசும் பாடியிருப்பது கூடுதல் சிறப்பு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தலைமுறையை தாண்டி நிற்கும் ஜேசுதாசின் இசைக்குடும்பம்... அடுத்து பாட வந்திருப்பது யார் தெரியுமா?

ஜேசுதாஸ் குடும்பத்தின் நான்காவது தலைமுறையும் இசை விருந்து அளிக்க தயாராகி விட்டார். ஜேசுதாசின் பேத்தியும், விஜய் ஜேசுதாவின் மகளுமான அமேதாவும் பாடகி ஆகிவிட்டார்.

Advertisment

ஜேசுதாஸ் பேத்தி:

மலையாளம் , தமிழ் இரண்டிலும் ஜேசுதாஸ் குடும்பம் ரசிகர்களுக்கு இசை விருந்தை அளித்து வந்தது. இந்நிலையில், அவர்கள் குடும்பத்தின் நான்காவது தலைமுறையான அமேதா, தாத்தாவுட இணைந்து பாடியுள்ளார்.

இசையமைப்பாளர் வி.தட்சிணாமூர்த்தி, கடந்த 2013 ஆம் ஆண்டு மரண மடைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அமேதாவை தனது இசையில் பாட வைத்துள்ளார். சென்னையில் அந்த பாடல் பதிவு செய்யப்பட்டபோது அமேதாவுக்கு நான்கு வயது. பேத்தியுடன் சேர்ந்து தாத்தாவான கே.ஜே.ஜேசுதாசும் பாடியிருப்பது கூடுதல் சிறப்பு.

publive-image

மலையமாருத ராகத்தில் ‘ராமா ரவிகுல ஸோமா..’ என்று தொடங்கும் கீர்த்தனையை அமேதா பாடியிருக்கிறாள். இன்னொரு ராகத்தில் அமைந்த பாடலை குருவாகவும், சீடராகவும் இருந்து இரு குரலில் ஜேசுதாஸ் பாடியிருக்கிறார்.

Singer Yesudas
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment