மாதவிடாய் என்பது எந்தவொரு பெண்ணுக்கும் வலிமிகுந்த கட்டமாகும்.
பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் சுழற்சியின் போது பிடிப்புகள், முதுகுவலி, மனநிலை மாற்றங்கள், குமட்டல் மற்றும் பிற ஒத்த நிலைமைகளை அனுபவிக்கின்றனர். ஆனால் டீ குடித்தால் உங்கள் மாதவிடாய் வலி குறையும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
மாதவிடாய் வலியால் தவிக்கும் பெண்கள் இந்த 5 'டீ' அடிக்கடி குடிக்க அறிவுறுத்துகிறார் டாக்டர் உஷா நந்தினி
மாதவிடாய் காலத்தில் கருமுட்டை ஆரோக்கியமாக இருக்கவும், வலி இல்லாமல் இருக்க, இன்ஃபெக்ஷன் வராமல் இருக்க மாதவிடாயின் முதல் 5 நாட்களும் இந்த டீ நீங்கள் குடிக்கலாம்.
ஆவாரம் பூ டீ
/indian-express-tamil/media/media_files/2025/01/30/24PmMpcDOm4vQZV29hYv.jpg)
5 ஆவாரம் பூ எடுத்து தண்ணீரில் போட்டு நன்கு கொதித்த பிறகு, அதை வடிகட்டி கருப்பட்டி சேர்த்து குடிக்கலாம்.
பிரீயட்ஸ் நேரத்தில் உதிரப்போக்கு குறைவாக உள்ள பெண்கள் இந்த டீ குடிக்கும் போது, உதிரப்போக்கு நன்றாக இருக்கும். மாதவிடாய் வலியும் குறையும். வீக்கத்தை குறைக்கும் தன்மையும் இதற்கு உண்டு.
ஆனால் உங்களுக்கு ஏற்கெனவே அதிக ரத்தப்போக்கு இருந்தால், இந்த டீ குடிக்காமல் தவிர்ப்பது நல்லது.
செம்பருத்தி பூ டீ
/indian-express-tamil/media/media_files/2025/04/21/siW7RK8XKFkFcRuK6lCA.jpg)
இயற்கையாக செம்பருத்தி பூ ஹார்மோன் அளவை சீர்செய்யக்கூடியது. கருமுட்டை வளர்ச்சிக்கு உதவும்.
5 செம்பருத்தி இதழ்கள் எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும். இத்துடன் கால் எலுமிச்சை பழம் பிழிந்து, தேவைப்பட்டால் நாட்டுச்சர்க்கரை கருப்பட்டி சேர்த்து குடிக்கலாம்.
செம்பருத்தி பூ டீ, ஹார்மோன் பேலன்ஸ் செய்ய உதவும். உதிரப்போக்கு நன்றாக வெளியேற உதவும். கருப்பைக்கு போகக்கூடிய ரத்த ஓட்டத்தை சீர்செய்யக்கூடிய தன்மையும் இதற்கு உண்டு.
அதேசமயம் அதிக உதிரப்போக்கு உள்ளவர்கள் இந்த டீ குடிக்காமல் தவிர்ப்பது நல்லது.
ரோஜா இதழ் டீ
/indian-express-tamil/media/media_files/2025/04/16/y1YacBsellgQanPgFBBF.jpg)
ரோஜா பூ, மனம் அமைதியாகவும், மன அழுத்த சம்பந்தமான கார்டிசோல் ஹார்மோன்களை கட்டுக்குள் வைக்கும். பீரியட்ஸ் நேரத்தில் ரொம்ப ஸ்ட்ரெஸ், கோபம், தூக்கமின்மை போன்ற பிரச்னைகளுக்கு ரோஜா இதழ் டீ உதவும்.
கால் கைப்பிடி ரோஜா இதழ் எடுத்து தண்ணீரில் போட்டு அத்துடன் ஒரு ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கும் போது மனம் நிம்மதியாக இருக்கும்.
அதிமதுரம் டீ
/indian-express-tamil/media/media_files/J56GcH97MNkCT0O3LF2b.jpg)
ஒருவேளை பீரியட்ஸ் நாட்களில் உங்களுக்கு அதிக உதிரப்போக்கு இருந்தால் இந்த டீ உங்களுக்கு உதவும்
அதிமதுரக் கட்டை அல்லது பொடி நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இந்த அதிமதுர பொடியில், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அதில் நாட்டுச்சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்க்கவும். இது இரவு நேரத்தில் சாப்பிடும் முன் டீ மாதிரி குடிக்கலாம்.
இது உதிரப்போக்கை குறைக்கும். அதேநேரம் மன அழுத்தத்தை குறைக்கும். தூக்கத்தைக் கொடுக்கும். மேலும் மாதவிடாய் காலத்தில் அனுபவிக்கக் கூடிய வீக்கம், வலி, மார்பக வலி, இடுப்பு, கால், தொடை வலிக்கு இது சிறந்த நிவாரணம் அளிக்கும்.