பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக மாணவர் பிரத்யேகமான கை கைகடிகாரத்தை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். ராம்கிஷோர் என்ற மாணவர் கடந்த 6 ஆண்டுகளாக முயற்சி செய்து ஆபத்தான சூழ்நிலையில் இருந்து தற்காத்துக்கொள்ளும் இந்த நவீன கை கடிகாரத்தை உருவாக்கியுள்ளார்.
இதனை பெண்கள் மட்டும் இல்லாமல் வயதானவர்களும் தங்கள் பாதுகாப்பு அணிந்து கொள்ளலாம் என்கின்றனர். பெண்கள் பாதுகாப்பிற்காக பல கருவிகள் இருந்தாலும் அதனை பயன்படுத்துவதற்கு காலதாமம், சிரமம் இருபதால் கையில் கட்டும் கடிகாரமாக இந்த கருவி இருப்பது இதன் மற்றொரு சிறப்பு. அதேபோல் சென்ட்ரல் ஐ.ஐ.டி மெட்ராஸ் எலெக்ட்ரானிக்ஸ் சென்டரலில் இதன் நம்பகதன்மை சோதனை செய்யப்பட்டு அதில் வெற்றி பெற்றுள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/dc31001b-762.jpg)
இதனை கையில் கட்டிக்கொண்டு செல்பவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் எதிரிகளுக்கு 5 கிலோ வாட்டில் மின்சாரம் பாய்ந்து ஒரு சில வினாடிகள் நிலை குலைய வைக்கிறது. மேலும் பாதிக்கப்பட்ட மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நபர் இருக்கும் இடத்தை உடனடியாக காவல்துறை மற்றும் பெற்றோருக்கு தெரிவித்து விடுகிறது.
/indian-express-tamil/media/post_attachments/24cc1be1-c3d.jpg)
இந்த கடிகாரத்தின் அறிமுக விழா லலித்தாம்பிகை மருத்துவக்கல்லூரியில் நடைபெற்றது. இதில் டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் கலந்து கொண்டு கை கடிகாரத்தை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பேசிய அவர், மக்கள் பயன்பாட்டிற்காக இது போன்ற கண்டுபிடிப்புகளுக்கு பல கோடி செலவானாலும் அதனை தமது பல்கலைக்கழகம் செய்ய தயார் என தெரிவித்தார். அதேபோல் இந்த கடிகாரம் குறைந்த விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
செய்தி: சக்தி சரவணன் - சென்னை.