இந்த காலநிலை சளி, இருமல், ஜலதோஷம் போன்றவற்றை உண்டாக்கக் கூடியது. ஆனால் பயம் தேவையில்லை. இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே இதிலிருந்து மீண்டு விடலாம். நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும். நோய்த்தொற்றை உண்டாக்கும் ஆபத்தான சால்மோனெல்லா என்ற பாக்டீரியாவை அழிக்க மல்லி பயன்படுகிறது. மல்லியில் பைட்டோ நியூட்ரியண்ட் குணங்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்களும் அடங்கியிருக்கிறது. இதுவே நமக்கு மருத்துவரீதியான பலனைக் கொடுப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. ஆகையால் எளிதான மிளகு - மல்லி சூப் உங்களின் சளி, இருமல், காய்ச்சலை ஓட ஓட விரட்டும்.
முதலில் கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், மிளகு, பிரியாணி இலை தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம், கேரட், ஊற வைத்த பாசிப்பருப்பு சேர்த்து நன்கு வதக்கியவுடன், எல்லா தூள்களையும் ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கலந்து தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
பின்னர் இறக்குவதற்கு முன் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து ஒரு முறை கொதிக்க வைத்து சூடாகப் பரிமாறவும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”