பொதுவாக இந்த மோத்திசூர் லட்டு வகைகளை நாம் கடையில்தான் வாங்குவோம். ஆனால் இதை நாம் வீட்டில் செய்ய முடியும். இதற்கு அதிக உழைப்பை செலுத்த வேண்டும் என்பதில்லை. அதன் ரெசிபியை தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்
250 கிராம் கடலை மாவு
400 எம்.எல் தண்ணீர்
ஆரஞ்சு -ரெட் ஃபுட் கலர் சிறிய அளவு
பால் கவர்
பொறிக்க எண்ணெய்
500 கிராம் சர்க்கரை
250 எம்.எல் தண்ணீர்
ஏலக்காய் பொடி ஒரு ஸ்பூன்
2 டேபிள் ஸ்பூன் நெய்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு கொண்டு வரவும். அதில் ஆரஞ்சு- ரெட் ஃபுட் கலரை சேர்க்கவும். தொடர்ந்து பால் கவர் அல்லது கோதுமை மாவு இருக்கும் பாக்கெட்டை நன்றாக சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். அதில் இந்த மாவை பாதி அளவில் ஊற்ற வேண்டும். மேல் பகுதியை மட்டும் ரப்பர் பேண்ட் போட்டு கட்டிவிட்டு. கிழே சிறிய அளவில் ஓட்டை போட வேண்டும். பொறிக்கும் அளவிற்கு எண்ணெய் எடுத்து கொண்டு நன்றாக சூடு செய்ய வேண்டும். இந்த கவரை மெதுவாக பிழிந்தால் எண்ணெய்யில் மாவு விழுந்து சிறிய பூந்திகளாக மாறும். இப்படி எல்லா வற்றையும் பொறித்து எடுக்கவும்.
இதைத்தொடர்ந்து அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் சர்க்கரை, தண்ணீர் சேர்க்கவும். தொடர்ந்து ஏலக்காய் பொடி, நெய் சேர்த்து பாகாக மாற்றவும். அதில் பொறித்த பூந்தியை சேர்க்கவும். 2 முறை கிளரவும். அடுப்பை அணைத்துவிட்டு, அரை மணி நேரம் காத்திருக்கவும். தொடர்ந்து சிறிய உருண்டைகளாக பிடித்துக்கொள்ளவும். சூப்பரான மோத்திசூர் லட்டு ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“