முருங்கை இலையில் சர்க்கரை நோய்யை கட்டுப்படுத்தவும், அதிக ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. குறிப்பாக உடல் எடை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இன்சுலின் அளவை சீராக்குகிறது. இனிப்பாக சாப்பிட்ட வேண்டும் என்ற எண்ணத்தை குறைக்கிறது. மேலும் சாப்பிட்ட உடன் அதிகரிக்கும் சர்க்கரை அளவை இது குறைக்கிறது.
இதில் உள்ள அதிக நார்சத்து உள்ளதால், உடல் எடை குறையும். அதிக நாசத்து உள்ள உணவுகளை எடுத்துகொள்ளும்போது, குறைந்த கலோரிகளை நாம் எடுத்துகொள்வோம். இதனால் உடல் எடை குறையும்.
இதில் வீக்கத்திற்கு எதிரான குணங்கள் இருப்பதால், உடலில் உள்ள வீக்கத்தை குறைக்கும். இந்நிலையில் இது நாம் அதிகம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை குறைக்கும். இந்நிலையில் ஆய்வு ஒன்றில், வீக்கத்திற்கு எதிரான பண்புகள் உள்ள உணவு முறையை பின்பற்றும்போது, உடல் பருமனாக இருப்பவர்களுக்கு உதவியாக இருந்ததாக கூறப்படுகிறது.
நாம் சாப்பிடும் உணவை, சக்தியாக மாற்றுவதுதான் மெட்டபாலிசம். நமது மெட்டபாலிசம் எவ்வளவு வேகமாக இருக்கிறதோ, அந்த அளவில் கலோரிகளை நாம் எரிக்க முடியும். நல்ல ஆரோக்கியமான மெட்டபாலிசம் உடல் எடை குறைக்க உதவும். இது ஆரோக்கியமான மெட்டபாலிசத்தை கொடுத்து, உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி உடல் எடை குறைக்க உதவுகிறது.
மேலும் இது கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்துகொள்ள உதவுகிறது. இரும்புசத்து, கால்சியம், வைட்டமின் பி இருப்பதால் மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
இது சுவாச பிரச்சனையை, சிறுநீரக பிரச்சனையை கூட இது குணமாக்கும் என்று கூறப்படுகிறது.
2 கப் தண்ணீரில், முருங்கை இலை மற்றும் முங்கை இலை பொடியை சேர்க்க வேண்டும். இதை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தொடர்ந்து வடிகட்டியவுடன், இதை வெறும் வயிற்றில் குடிக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“