ஆள்பாதி ஆடைபாதி என்பது எதுக்கு பொருந்துகிறதோ இல்லையோ, சினிமா, சீரியல் கலைஞர்களுக்கு கண்டிப்பாக கண்டிப்பாக பொருந்தும். தினசரி டிவியில் வருவதால், அவர்களும் தங்களின் ஆடைத்தேர்வில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
சில நேரங்களில் சில நடிகர், நடிகைகள் உடுத்தும் ஆடை’ ரசிகர்களுக்கு பிடித்துவிட்டால், உடனே அதுபோன்ற மாடல் எங்குக் கிடைக்கும் என இணையத்தில் தேட ஆரம்பித்துவிடுவார்கள். அப்படி உடை அணிவது முதல் மேக்கப் வரை பலருக்கும் சினிமா, சீரியல் தான் மினி டுட்டோரியலாக உள்ளது.
அப்படி சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பாவனி அணிந்த காஸ்ட்யூம்’ பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
இதனால் பலரும் பாவனியின் உடை குறித்து இணையத்தில் தேட ஆரம்பித்தனர். அப்போது தான் பாவனி உடுத்தும் ஆடைகளுக்கு பின்னால், ஒரு மாற்றுத்திறனாளி பெண் இருப்பது தெரியவந்தது. இவர் ஒரு பிரபல காஸ்ட்யூம் டிசைனர். பாவனி மட்டுமல்ல சிபிக்கும் இவர்தான் காஸ்ட்யூம் டிசைனராக இருந்தார்.
யார் அந்த பெண்?
சென்னையைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் இந்து கோபிராஜன் ஒரு வார்ட்ரோப் ஸ்டைலிஸ்ட், காஸ்ட்யூம் டிசைனர் மற்றும் இல்யூஸ்ட்ரேட்டர்.
27 வயதான இந்து ஒரு மாற்றுத்திறனாளி, நாற்காலி தான் அவருடைய உலகம். ஆனாலும் இந்து அதையெல்லாம் ஓரங்கட்டி விட்டு, தனது விடாமுயற்சியால், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பிறகு, தனது தந்தையின் தொழிலுக்கு உதவியாக இருந்து வந்தார்.
அப்போது தான் இந்துவுக்கு ஃபேஷன் மீது மிகப்பெரிய ஆர்வம் வந்தது. அதற்காக, அவர் ஃபேஷன் டிசைனிங்கில் இரண்டு வருட படிப்பை மேற்கொண்டார். படிப்பை முடித்த பிறகு முதலில் தனக்காக ஆடைகளை டிசைன் செய்ய தொடங்கினார். அங்கிருந்துதான் இந்துவின் பயணம் ஆரம்பமானது.
#NewProfilePic pic.twitter.com/XDtW0Nwj6l
— Indu Gopirajan (@Indu_IG) May 9, 2022
பெரும்பாலான ஆடை வடிவமைப்பாளர்கள் தங்கள் பிராண்டிற்காக பிரச்சாரம் செய்ய உள்ளூர் அல்லது சர்வதேச மாடல்களைத் தான் நம்பியிருக்கிறார்கள். ஆனால், காஸ்ட்யூம் டிசைனர் இந்து கோபிராஜன், இந்த விதிமுறைகளை மாற்றி எழுத முடிவு செய்தார். அதற்காக தனது சொந்த பிராண்டிற்கு தானே மாடலிங் செய்தார்.
அவரது ஆடை-வடிவமைக்கும் திறமை பலரை கவர்ந்தது. அதன் காரணமாக “திரையுலகில் இருந்து சில நடிகர்களை ஸ்டைல் செய்யும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. லாக்டவுனுக்கு முன், மிஸ் இந்தியா 2018 அனுக்ரீத்தி வாஸின் வடிவமைப்பில் வேலை செய்தார்.
லாக்-டவுனுக்கு பிறகுதான், அவரது வாழ்க்கையில் பெரிய திருப்பம் நிகழ்ந்தது. அதுவரை ஆடைகளை மட்டுமே வடிவமைத்த இந்து, ஃபேஷன் டிசைனிங் மீது கொண்ட காதலால், சொந்தமாக நிறுவனத்தைத் தொடங்கினார். அதில் தன்னைபோல நிறைய கனவுகளுடன் இருப்பவர்களுக்கு தன் அனுபவங்களை பகிர்ந்து அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றினார். ஆனால் கொரோனா காரணமாக அந்த நிறுவனத்தை இந்துவால் தொடர முடியவில்லை.
இந்து, சன் நெட்வொர்க்கின் ஆதித்யா டிவியிலும் ஃப்ரீலேன்ஸ் ஃபேஷன் ஸ்டைலிஸ்டாக உள்ளார்.
இப்படி மாற்றுத்திறனாளியாக இருந்து படிப்படியாக முன்னேறிய இந்து, இப்போது பல பிரபலங்கலளின் குறிப்பாக அப்கமிங் ஆர்டிஸ்ட், சீரியல் ஆர்டிஸ்ட்களின் விருப்பமான ஃபேஷன் ஸ்டைலிஸ்டாக இருக்கிறார்.
குறிப்பாக பிக்பாஸ் சிபி, இந்துவுக்கு ஒரு உடன்பிறவா சகோதரைனை போல. பிக்பாஸ் முழுவதும் சிபி அணிந்த அனைத்து காஸ்ட்யூம்ஸ்கும் இந்து தான் பேஷன் டிசைனர். ஆடை வடிவமைப்பில் சிபி, இந்துவுக்கு முழு சுதந்திரமும் கொடுத்தார். அதைவிட அதிகமாக இந்துவை நம்பினார்.
இப்படி பல பிரபலங்களுக்கு ஆடை வடிவமைத்து கொடுத்தாலும், விஜய் சேதுபதி மற்றும் விஜய தேவரகொண்டா இருவருக்கும் ஸ்டைலிங் செய்ய வேண்டும் என்பது இந்துவின் ஆசை.
என்னை பொறுத்தவரைக்கும் பணம் முக்கிய கிடையாது. நம்ம பண்ற வேலை பெஸ்டா இருந்தாலே, எல்லாமே உங்களை தேடி வரும். ”உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை செய்யுங்கள். நீங்கள் நினைப்பது ஒரு நாள் நிறைவேறும்” என்கிறார் இந்த புதுமைப்பெண் இந்து.
பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளுக்கு ஃப்ரொஃப்ஷனல் வாழ்க்கையில் நிறைய நடைமுறை சிக்கல்கள் உள்ளது. அதனால் பலர் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களை போன்ற மனிதர்களுக்கு இந்து கோபிராஜானின் வாழ்க்கை’ மிகப்பெரிய உத்வேகம் அளிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“