பொலிவான, அழகான சருமம் வேண்டும் என்பதே அனைவரின் ஆசை. ஆனால் சிலருக்கு முகத்தில், மூக்கில், கன்னங்கள் என கருப்பு நிற திட்டுகள் காணப்படும். இதை கிராமப் புறத்தில் 'மங்கு' என குறிப்பிடுவார்கள்.
Advertisment
முகத்தில் மங்கு ஏற்படுவதற்கான பல காரணங்கள் உள்ளன, மேலும் அது மெலாசமா (Melasma) என்ற ஒரு மருத்துவ நிலை கூட. பொதுவாக, அதிகப்படியான சூரிய ஒளி வெளிப்பாடு, பூப்பு முடிந்த நிலை, ஹைப்போதைராய்டிசம், மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருக்கும்போது இவை ஏற்படும். இவற்றால் அரிப்பு இருக்காது. ஆனால், முகத்தின் அழகைக் கெடுத்தபடி இருக்கும்.
அழகுக்கலை நிபுணர் வசுந்தரா முகத்தில் உள்ள மங்கு மறைய சில எளிமையான குறிப்புகளை பகிர்ந்துள்ளார்.
தேவையானவை
Advertisment
Advertisements
அதிமதுரம்
காய வைத்த ஆரஞ்சு தோல்
எப்படி செய்வது?
அடுப்பில் கடாய் வைத்து அதில் தண்ணீர் ஊற்றவும். இதில் அதிமதுர கட்டை, காய வைத்த ஆரஞ்சு தோல் சேர்க்கவும். இதை நன்கு கொதிக்க விடவும்.
அதிமதுரம், ஆரஞ்சு தோல் சாறு இறங்கி தண்ணீர் நிறம் மாறிய பிறகு அடுப்பை அணைக்கவும். இந்த தண்ணீரை வேறு ஒரு கிண்ணத்தில் மாற்றவும். இதை பாட்டிலில் அடைத்து வைத்து, சில நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
இப்போது ஒரு கிண்ணத்தில் சுத்தமான கற்றாழை ஜெல் எடுத்து, அதில் ஏற்கெனவே கொதிக்க வைத்த தண்ணீரை 4,5 டீஸ்பூன் சேர்க்கவும்.
முகத்தை நன்கு கழுவி சுத்தம் செய்த பிறகு, இந்த கற்றாழை பேஸ்டை எடுத்து முகத்தில் மெதுவாக மசாஜ் செய்யவும். நன்கு மசாஜ் செய்தபிறகு, ஆப்பிள், மாதுளை சாறு கலந்த ஃபேஸ் பேக்கை உங்கள் முகத்தில் தடவவும். மங்கு இருக்கும் பகுதிகளில் கவனம் செலுத்தவும். 15 நிமிடங்கள் அப்படியே விட்டு, பிறகு முகத்தை கழுவவும். இதை தொடர்ந்து செய்துவர மங்கு விரைவில் குணமாகும்.