கோடை விடுமுறையை ஒட்டி சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், மும்பை - கன்னியாகுமரி இடையே வாராந்திர ரயில் முன்பதிவு இன்று முதல் தொடங்கியது.
மும்பை - கன்னியாகுமரி இடையே வாராந்திர கோடை சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்பதிவு இன்று மாலை தொடங்கியது. கோடை விடுமுறையை ஒட்டி சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை ரயில்வே அறிவித்து வருகிறது.
அந்தவகையில், மும்பையிலிருந்து கன்னியாகுமரிக்கு கோடை சிறப்பு ரயில் அறிவிப்பை தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ளது. மே, ஜூன் மாதங்களில் வாரம்தோறும் புதன்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு மும்பையிலிருந்து புறப்படும் ரயில் வியாழக்கிழமை பிற்பகல் 1.15 மணிக்கு கன்னியாகுமரியை அடைகிறது.
அதேபோல வியாழக்கிழமை கன்னியாகுமரியிலிருந்து பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்படும் ரயில், சனிக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு மும்பையை அடைகிறது.
அதன்படி, மே 7, 14, 21, 28, ஜூன் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் மும்பையிலிருந்து குமரிக்கும் மே 8, 15, 22, 29, ஜூன் 5,12, 19, 26 ஆகிய தேதிகளில் குமரியிலிருந்து மும்பைக்கும் ரயில் இயக்கப்படுகிறது.
இன்று(ஏப். 23) பிற்பகல் 2.15 மணிக்கு இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்