செம்ம சுவையான முறையில் வெங்கடேஷ் பட் மாதிரி நீங்களும் முருக்கு செய்யுங்க.
தேவையான பொருட்கள்:-
இட்லி மாவு - ஒரு கப்
பொட்டுக்கடலை - ஒரு கப்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
எள் அல்லது சீரகம் - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:-முதலில் ஒரு மிக்சி எடுத்து அதில் ஒரு கப் பொட்டுக்கடலையை சேர்த்து நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.பின்னர், ஒரு அகலமான பாத்திரம் எடுத்து அதில் இட்லி மாவு சேர்க்கவும். மாவு புளிக்கமால் இருந்தால் மிகவும் நல்லது.தொடர்ந்து அதில் முன்னர் அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை மாவை சேர்க்கவும்.பிறகு அதனுடன் ஒரு ஸ்பூன் எள் அல்லது சீரகம் மற்றும் உப்பு சேர்த்து, கைகளால் மாவை பிசைய தொடங்கவும்.முறுக்கு மாவுக்கு எப்படி மாவு கெட்டியாக பிசைய வேண்டுமோ அதே பதத்திற்கு மாவை நன்றாக பிசையவும்.
ஓரளவுக்கு மாவு உருண்டையாக பிசைந்தவுடன் அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசையவும்.மாவை நன்றாக பிசைந்ததும், உடனடியாகவே முறுக்கு புளிய ஆரம்பிக்கலாம்.எப்போதும் போல், கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் புளிந்துள்ள முறுக்கு மாவை இட்டு, பொன்னிறமாக மாவு மாறும் வரை பொறுத்து, நன்றாக வேக வைத்து வெளியில் எடுக்கவும்.இப்படியாக மாவுகளை பொரித்து எடுத்தால், சூடான மற்றும் சுவையான இட்லி மாவில் செய்த முறுக்கு ரெடியாக இருக்கும். அவற்றை நீங்கள் சுவைத்து மகிழலாம்.