/indian-express-tamil/media/media_files/2025/10/06/whatsapp-image-2025-10-06-at-1-2025-10-06-16-48-15.jpg)
பண்டிகை காலத்தையொட்டி நாகையிலிருந்து இலங்கைக்கு வாரத்தின் 7 நாட்களும் பயணிகள் கப்பல் சேவை இயக்கப்படவுள்ளதாக தனியார் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு சுபம் கப்பல் நிறுவனம் சார்பில் “சிவகங்கை” என்ற பெயரில் பயணிகள் கப்பல் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இதுவரை வாரத்தில் செவ்வாய்க்கிழமையைத் தவிர்த்து 6 நாட்கள் மட்டுமே சேவை நடைபெற்று வந்தது.
பண்டிகை காலத்தையொட்டி இருநாட்டு பயணிகளின் அதிகரித்துள்ள தேவையை கருத்தில் கொண்டு, அக்டோபர் மாதம் முழுவதும் வாரம் முழுவதும் கப்பல் சேவை வழங்கப்பட உள்ளது. அதன்படி வரும் 14, 21, 28 ஆம் தேதிகளில் (செவ்வாய்க்கிழமைகளில்) கூட சேவை நடைபெறும். இதே நேரத்தில், தீபாவளி பண்டிகையான அக்டோபர் 20 ஆம் தேதி கப்பல் சேவை இயக்கப்படாது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயணக் கட்டணம்
நாகையிலிருந்து இலங்கை சென்று வர ரூ.8,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் நாகையிலிருந்து இலங்கை செல்ல ரூ.4,500, இலங்கையிலிருந்து நாகை திரும்ப ரூ.3,500 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.