தெலங்கானா மாநிலத்தில் இருந்து கச்சக்குடா - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை, ஏப்ரல் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கச்சக்குடாவில் இருந்து இந்த ரயில் (07435) ஏப்ரல் 4 முதல் மே 5 வரை வெள்ளிக்கிழமைகளில் இரவு 07.45 மணிக்கு புறப்பட்டு, சனிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும்.
மறு மார்க்கத்தில், நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இந்த ரயில் (07436) ஏப்ரல் 6 முதல் மே 4 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமைகளில் காலை 06.30 மணிக்கு கச்சக்குடா சென்று சேரும்
இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு பெட்டியுடன் கூடிய சரக்கு ரயில் பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.