புதுடெல்லி பிரகதி மைதானத்தில் செப்டம்பர் 9, 10-ம் தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் முகப்பு பகுதியில் பிரம்மாண்ட நடராஜர் சிலை கம்பீரமாக வீற்றிருக்கிறது.
உலகத் தலைவர்கள் இந்த வார இறுதியில் பாரத் மண்டபத்தில் ஒன்று கூடும் போது, அவர்கள் 27 அடி உயரத்தில், சிவபெருமானின் அற்புதமான பிரபஞ்ச நடனத்தை காண்பார்கள்.
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுவாமிமலையைச் சேர்ந்த சிற்பிகளால் வடிவமைக்கப்பட்ட, தலைசிறந்த நடராஜர் சிலை, 18 டன் எடை கொண்டது.
இது பாரம்பரியம் மற்றும் நவீன தேவைகளின் இணக்கமான கலவை என்று அதன் கலைஞர்கள் அழைக்கிறார்கள்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய 61 வயதான ஸ்ரீகண்ட ஸ்தபதி, தனது சகோதரர்கள் ராதாகிருஷ்ண ஸ்தபதி மற்றும் சுவாமிநாத ஸ்தபதி ஆகியோருடன் சேர்ந்து சிலையை உருவாக்கினார்.
அங்கீகாரம் மற்றும் தொலைபேசி வாழ்த்துக்களால் தாங்கள் மூழ்கிவிட்டதாகக் கூறினார்.
G20 உச்சி மாநாடு நடைபெறும் பாரத மண்டபத்தில் உலகின் மிக உயரமான நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது
அவர்கள் தங்கள் கைவினைத்திறனை சோழர்களின் சகாப்தத்தில் - பெரிய (பிரகதீஸ்வரர்) கோவிலின் கட்டுமானத்தில் கண்டுபிடித்துள்ளனர். அவர்களின் பரம்பரை 34 தலைமுறைகளுக்கு முந்தையது.
பழங்கால குருகுல முறையில் பயிற்சி பெற்ற ஸ்தபதி குடும்பத்திற்கு, கலாச்சார அமைச்சகத்தின் இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் டெண்டரில் நிர்ணயிக்கப்பட்ட கடுமையான நிபந்தனைகளுக்குப் பிறகு நடராஜா திட்டம் ஒப்படைக்கப்பட்டது.
ராதாகிருஷ்ண ஸ்தபதி மற்றும் சுவாமிநாத ஸ்தபதியுடன், ஸ்ரீகண்ட ஸ்தபதி (வலது)
பத்து குறிப்பிடத்தக்க சிலைகளை வடிவமைப்பதில் நிரூபிக்கப்பட்ட எங்களின் நிபுணத்துவம், ஜிஎஸ்டி விவரங்களுடன் ஐந்தாண்டுகளில் 300க்கும் மேற்பட்ட ஆர்டர்களை வெற்றிகரமாக முடித்தல் போன்ற நிபந்தனைகள், டெண்டர் செயல்முறைக்கு உதவியதாக ஸ்ரீகண்டா கூறினார்.
27 அடி உயரமுள்ள உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலையின் காட்சி
சிதம்பரத்தில் உள்ள தில்லை நடராஜர் கோயில், கோனேரிராஜபுரத்தில் உள்ள உமா மகேஸ்வரர் கோயில் மற்றும் தஞ்சாவூரில் உள்ள யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான பிரகதீஸ்வரர் கோயில் ஆகிய மூன்று புகழ்பெற்ற நடராஜர் சிலைகளிலிருந்து- இந்த சிலையின் வடிவமைப்பு உத்வேகம் பெற்றதாக அவர் கூறினார்.
பாரம்பரிய 'லாஸ்ட்-மெழுகு' வார்ப்பு (lost-wax’ casting) செயல்முறை மூலம் சிலை வடிவமைக்கப்பட்டது, இது சோழர் காலத்தைச் சேர்ந்தது.
ஆரம்ப கட்டத்தில் ஒரு மெழுகு மாதிரியை உருவாக்கப்பட்டு, ஆபரணங்களுடன் துல்லியமாக விவரிக்கப்பட்டது.
முழு சிலையும் பின்னர் சுவாமிமலையில் மட்டுமே காணப்படும் தனித்துவமான வண்டல் மண் பசையால் மூடப்பட்டது, என்று அவர் கூறினார்.
இந்த முறைக்கு முக்கியமானது காவிரி களிமண். இது சுவாமிமலையில் ஆற்றின் ஒரு குறிப்பிட்ட திருப்பத்தில் மட்டுமே கிடைக்கும்.
சிலையை வெயிலில் காய வைத்து, பல பூச்சுகளுக்குப் பிறகு, அச்சுக்குள் இருக்கும் மெழுகு உருகும், பிறகு திரவ உலோகம் ஊற்றுவோம்.
அச்சு, குளிர்ந்த பிறகு, கவனமாக உடைக்கப்பட்டு, அதனுள் இருந்து அழகான சிலை வெளியே வரும். அது பின்னர் ஃபினிஷிங்காக உளி கொண்டு செதுக்கப்பட்டு, அலங்கார வேலைகளுடன் முடிக்கப்படும், என்று ஸ்ரீகண்டா கூறினார்.
முதலில் பஞ்ச லோஹாவில் இருந்து உருவாக்க நினைத்த சிலை, பிறகு அஷ்டதாதுவில் (எட்டு உலோக சிலை) வடிவமைக்கப்பட்டதாக மாற்றப்பட்டது.
எண்ணத்துக்கும், செயல்படுத்துவதற்கும் இடையில், தூதுக்குழு மெழுகு மாதிரியைப் பற்றிய கருத்துக்களை வழங்கியது, சிலையின் உறுப்புகளில் சிறிய மாற்றங்கள் தேவைப்பட்டது.
அடிப்படை மெழுகு மாதிரியானது ஸ்ரீகண்டா மற்றும் அவரது இரு சகோதரர்களுக்கு இடையேயான கூட்டு முயற்சியாகும், இந்த முழு திட்டமும் முடிவடைய ஏழு மாதங்கள் ஆனது.
ரூ.10 கோடி "ஜிஎஸ்டி உட்பட" இதற்கு செலவானதாக ஸ்ரீகண்ட ஸ்தபதி கூறினார்.