/indian-express-tamil/media/media_files/2025/04/30/mvsl3oljFTv09bfOWZtq.jpg)
முகப்பருக்கள் வருவது இயல்பான விஷயம் தான். பதின் பருவத்தினருக்கு இது வழக்கமாக வரும். அதன் பின்னர், ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் இவை மறைந்து விடும். சிலருக்கு வெயில் காலங்களில் முகத்தில் பருக்கள் வரும். அவை காலநிலை மாற்றத்திற்கு பிறகு இருக்காது.
ஆனால், சிலருக்கு அடிக்கடி முகத்தில் பருக்கள் வரும். மேலும், பருக்கள் இருந்த தடமும் அப்படியே இருக்கும். குறிப்பாக, சருமத்தை சரியாக பராமரிக்காமல் இருந்தால் இது போன்று பருக்கள் அடிக்கடி வரும். எனவே, சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டு, முறையான சரும பராமரிப்பில் ஈடுபடுவது அவசியம் ஆகும்.
சரும பராமரிப்பு என்றதும் கடைகளில் இருந்து விலை உயர்ந்த ஃபேஸ் க்ரீம், சீரம் போன்ற பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருக்கும் சில எளிமையான பொருட்களை பயன்படுத்தியே முகத்தில் இருக்கும் பருக்களை சுலபமாக அகற்றி விடலாம்.
அந்த வகையில், புதினா மற்றும் எலுமிச்சை சாறை தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நமக்கு தேவையான ஃபேஸ்பேக் தயாராகி விடும். இதனை முகத்தில் தேய்த்து விட்டு சுமார் 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இவ்வாறு தொடர்ச்சியாக செய்தால், ஒரு மாதத்தில் பருக்கள் மறையத் தொடங்கும்.
மேலும், இது போன்று வீட்டிலேயே இரசாயனங்கள் சேர்க்காமல் ஃபேஸ் பேக் தயாரித்து பயன்படுத்துவதால், ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்படும் சாத்தியக் கூறுகளும் இருக்காது.
நன்றி - KN SMILEY Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.