/indian-express-tamil/media/media_files/2025/01/29/0NmeaaLdxeh8kN3W8l88.jpg)
நம் முகத்தை எப்போதும் பொலிவாக பராமரிப்பது மிகவும் சவாலான காரியம். அதிலும் முக்கிய நிகழ்வுகளுக்கு செல்லும் போது கூடுதல் பொலிவாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் எல்லோருக்கும் இருக்கும். இதற்காக சில ஃபேஸ்கிரீம்களை பயன்படுத்தலாமா என்று கூட சிந்தித்து பார்த்திருப்போம்.
எனினும், இது போன்ற கிரீம்களில் இரசாயனங்கள் அதிகப்படியாக சேர்க்கப்பட்டிருப்பதால், அதனை பயன்படுத்துபவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது. மேலும், சில கிரீம்கள் விலை அதிகமாக இருப்பதால் அதனை வாங்கி பயன்படுத்த முடியாத சூழலும் சிலருக்கு இருக்கலாம்.
ஆனால், இவை எதுவும் இல்லாமல் வீட்டில் இருக்கக் கூடிய சில எளிமையான பொருட்களை வைத்து நம்மால் ஈசியாக ஃபேஸ்பேக் தயாரிக்க முடியும். அந்த வகையில் மஞ்சள் பொடி, அரிசி மற்றும் தேன் இருந்தாலே போதுமானது. மஞ்சள் பொடியுடன், வீட்டில் இருக்கும் அரிசியை பொடியாக அரைத்து சேர்த்துக் கொள்ளலாம். இத்துடன் சிறிதளவு தேன் சேர்த்து பசை பதத்திற்கு வரும் வரை கலக்க வேண்டும்.
இந்த ஃபேஸ்பேக்கை நம் முகத்தில் தேய்த்து விட்டு சுமார் 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இப்படி செய்தால் நம் முகம் பார்ப்பதற்கு மிகவும் பொலிவாக இருக்கும். இதில் இரசாயனங்கள் சேர்க்காததால், ஒவ்வாமை ஏற்படும் சாத்தியக் கூறுகளும் இல்லை. எனவே, இதனை தொடர்ந்து பயன்படுத்தலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.