ஃபுளோர் கிளீனர் வேண்டாம்; இப்படி வீடு துடைத்தால் சுத்தமாகவும் இருக்கும்… வாசனையாகவும் இருக்கும்!
உங்கள் வீட்டைப் பளபளப்பாகவும், புத்துணர்ச்சியூட்டும் வாசனையுடனும், அதே சமயம் பூச்சிகள் அண்டாமலும் வைத்திருக்க ஒரு சூப்பர் சிம்பிளான, செலவே இல்லாத வழி இருக்கிறது
உங்கள் வீட்டைப் பளபளப்பாகவும், புத்துணர்ச்சியூட்டும் வாசனையுடனும், அதே சமயம் பூச்சிகள் அண்டாமலும் வைத்திருக்க ஒரு சூப்பர் சிம்பிளான, செலவே இல்லாத வழி இருக்கிறது
வீட்டைச் சுத்தம் செய்ய அதிகப் பணம் செலவழிக்க வேண்டாம் என்று யோசிக்கிறீர்களா? இதோ உங்களுக்காக ஒரு அற்புதமான, சிக்கனமான வழி! வெறும் ஒரு ரூபாய் ஷாம்பு பாக்கெட்டை வைத்து உங்கள் வீட்டை எப்படி வாசனையாகவும், சுத்தமாகவும், பூச்சி இல்லாமலும் வைத்திருக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
Advertisment
ஒரு ரூபாய் ஷாம்பு பாக்கெட் (எந்த பிராண்டாக இருந்தாலும் சரி) கல் உப்பு - ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை கற்பூரம் - 2 வில்லைகள்
ஒரு பக்கெட் தண்ணீரில், ஒரு ரூபாய் ஷாம்பு பாக்கெட்டை (எந்த ஷாம்பூவாக இருந்தாலும் சரி) வெட்டி சேர்த்துக்கொள்ளுங்கள். அதனுடன் ஒரு கைப்பிடி கல் உப்பு மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்க்கவும். இரண்டு கற்பூரங்களை கைகளால் நசுக்கி பொடியாக்கி அதையும் தண்ணீரில் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
Advertisment
Advertisements
இந்தக் கலவையைக் கொண்டு உங்கள் வீட்டைத் துடைக்கும்போது, வீடு முழுவதும் ஒரு புத்துணர்ச்சியூட்டும் வாசனை பரவும். மேலும், இது அழுக்குகளை நீக்கி வீட்டைப் பளபளப்பாக மாற்றும். கற்பூரத்தின் வாசனை, வீட்டில் சிறிய பூச்சிகள் வராமல் தடுக்கும் ஒரு கூடுதல் பலனையும் அளிக்கிறது.
இந்த எளிய, செலவு குறைந்த முறையைப் பயன்படுத்தி உங்கள் வீட்டை எப்போதும் சுத்தமாகவும், வாசனையாகவும் வைத்துக் கொள்ளலாம்.