உங்க தலைமுடிக்கு கெமிக்கல் வேண்டாம்: தேங்காய் சிரட்டை வச்சு நேச்சுரல் ஹேர் டை இப்படி பண்ணுங்க

இந்த நரைமுடியை சரிசெய்யவும், ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்கவும் சித்த மருத்துவத்தில் பயனுள்ள தீர்வுகள் உள்ளதாக கூறுகிறார் டாக்டர் நித்யா.

இந்த நரைமுடியை சரிசெய்யவும், ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்கவும் சித்த மருத்துவத்தில் பயனுள்ள தீர்வுகள் உள்ளதாக கூறுகிறார் டாக்டர் நித்யா.

author-image
WebDesk
New Update
Dr Nithya Natural Hair Dye

Dr Nithya Natural Hair Dye

இன்றைய காலகட்டத்தில், இளநரை என்பது இளம் வயதினரிடையே, ஏன் குழந்தை பருவத்தினரிடமும் கூட அதிகரித்து வரும் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. இது உடல் உஷ்ணம், மன அழுத்தம், பித்த அதிகரிப்பு மற்றும் ஹீமோகுளோபின் குறைபாடு போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. இந்த நரைமுடியை சரிசெய்யவும், ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்கவும் சித்த மருத்துவத்தில் பயனுள்ள தீர்வுகள் உள்ளதாக கூறுகிறார் டாக்டர் நித்யா. 

வீட்டிலேயே நேச்சுரல் ஹேர் டை செய்ய தேவையான பொருட்கள்

Advertisment

தேங்காய் சிரட்டை    
வசம்பு    
விளக்கெண்ணெய்
தேங்காய் எண்ணெய்

செய்முறை

முதலில், தேங்காய் சிரட்டையையும், வசம்பையும் தனித்தனியே நன்கு சுட்டு கரியாக்கிக் கொள்ளவும். இந்த இரண்டு கரியையும் ஒன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டையும் சம அளவில் கலந்து, அதில் பொடித்த கரியை சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவை கருமை நிறத்தில் இருக்க வேண்டும்.

Advertisment
Advertisements

இந்த கலவையை உங்கள் தலைமுடியில், குறிப்பாக நரைத்த பகுதிகளில், ஒரே ஒரு முறை மட்டும் நன்கு அப்ளை செய்யவும். அப்ளை செய்த பிறகு, சுமார் இரண்டு மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும். 

பலன்கள்

இந்த முறையை தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம், நரைமுடி படிப்படியாக கருமையாக மாறுவதோடு, எதிர்காலத்தில் மீண்டும் நரைமுடி தோன்றுவதற்கான வாய்ப்புகளும் குறையும். இது ஒரு இயற்கை வைத்தியம் என்பதால், பக்க விளைவுகள் ஏற்படுமோ என்ற பயம் தேவையில்லை, என்கிறார் டாக்டர் நித்யா.

மற்ற குறிப்புகள் 

amla

நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்: ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை தேங்காய் எண்ணெயில் போட்டு லேசாக சூடுபடுத்தி, விரல்களால் தொட்டு தலையில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இது இளநரை பிரச்சனையை படிப்படியாக குணப்படுத்தும். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்யலாம்.

தான்றிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்: நெல்லிக்காய்க்கு பதிலாக தான்றிக்காய் பொடியையும் தேங்காய் எண்ணெயில் கலந்து பயன்படுத்தலாம். இது கூந்தல் வேர்களை பலப்படுத்துவதுடன், பொடுகு பிரச்சனையை நீக்கி, முடி உதிர்வதையும் குறைக்கும். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்வது நல்லது.

தலைமுடி சார்ந்த பிரச்சனைகளுக்கு வெளிப்புற பூச்சுக்களை மட்டும் நம்பாமல், உடலின் உள்ளே இருக்கும் கல்லீரல் மற்றும் ரத்த ஓட்டம் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்வதன் மூலமே இளநரை மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியும், என்கிறார் டாக்டர் நித்யா. 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: