/indian-express-tamil/media/media_files/2025/06/24/hair-dye-2025-06-24-20-40-45.jpg)
நரைமுடியை 2 நிமிடத்தில் கருப்பாக்குவது எப்படி என்று சிவா ஃபுட் பேக்டரி (Shiva Food Factory) என்ற யூடியூப் சேனலில் ஒரு சூப்பரான டிப்ஸ் வழங்கியுள்ளனர். Photograph: (Image Source: YouTube/ Shiva Food Factory)
தலையில் நாலு முடி நரைத்தாலே மனிதர்கள் நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள். நரைமுடியை 2 நிமிடத்தில் மறைய அவுரி பொடியுடன் வீட்டு தோட்டத்தில் இருக்கும் இந்த 2 இலைகளை மட்டும் சேர்த்து அரைத்து தடவிப் பாருங்கள். நரைமுடி கருகருவென மாறிவிடும்.
நரைமுடியை 2 நிமிடத்தில் கருப்பாக்குவது எப்படி என்று சிவா ஃபுட் பேக்டரி (Shiva Food Factory) என்ற யூடியூப் சேனலில் ஒரு சூப்பரான டிப்ஸ் வழங்கியுள்ளனர். அதை அப்படியே இங்கே தருகிறோம்.
உங்களுக்கு தலைமுடி நரைத்துவிட்டதா, டை அடிக்க வேண்டும், கெமிக்கல் கலந்த டை ஒத்துக்கொள்ளாது என்று கவலைப்படாதீர்கள். உங்கள் வீட்டில் கற்பூரவல்லி செடி இருந்தால் நன்றாக முற்றிய பெரிய இலைகளாக 6-6 கற்பூரவல்லி இலைகளைப் பறித்துக்கொள்ளுங்கள். அதனுடன் கொழுந்து கருவேப்பிலை 4 கொத்து எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டையும் தண்ணீரில் நன்றாக அலசியபின், கற்பூரவல்லி இலைகளையும் கருவேப்பிலை இலைகளையும் மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு, ஒரு காட்டன் துணியில் வைத்து நன்றாகப் பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள்.
இந்த கற்பூரவல்லி, கருவேப்பிலை இலை சாறில், அவுரி பொடி 2 ஸ்பூன் போட்டு நன்றாகக் கலக்குங்கள். நன்றாகக் கலக்கியபின் 10 நிமிடம் மூடிவையுங்கள். அதற்கு பிறகு, கையில் பிளாஸ்டிக் கவர் சுற்றிக்கொண்டு, இந்த கலவையை தலையில் நரைமுடி இருக்கும் இடங்களில் தடவுங்கள். 2 நிமிடத்தில் நரைமுடிகள் எல்லாம் ரொம்ப கருப்பாக மாறிவிடும். அரை மணி நேரம் அல்லது 1 மணி நேரம் அப்படியே வைத்திருந்துவிட்டு பிறகு தலைமுடியை அலசுங்கள். உங்கள் தலைமுடியில் இருந்த நரைமுடியெல்லாம் கருகருவென கருப்பாக மாறிவிட்டிருக்கும். காசு செலவில்லாமல், வீட்டிலேயே இயற்கை முறையிலான இந்த டை உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.