செம்பருத்தி பூ, பீட்ரூட் தோல்... கண்ட கண்ட ஹேர் டை-க்கு குட்பை சொல்லுங்க!

இயற்கையான முறையில் ஹேர் டை செய்வது பற்றி பார்ப்போம்.

இயற்கையான முறையில் ஹேர் டை செய்வது பற்றி பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
 Hair Dye

கெமிக்கல் ஏதும் கலக்காத இயற்கையான ஹேர் டை செய்யும் முறை பற்றி கூறப்பட்டுள்ளது. செம்பருத்தி பூ, பீட்ரூட் தோல் போன்று இயற்கையாக கிடைக்கும் பொருட்கள் கொண்டே ஹேர் டை செய்ய முடியுமாம். இதை செய்ய முதலில் அடுப்பில் பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி சூடாக விடவும். 

Advertisment

செம்பருத்தி பூ எடுத்து அதன் காம்பு பகுதியை நறுக்கி விட்டு தண்ணீரில் சேர்க்கவும். பூ நிறையாக எடுத்துக் கொள்ளவும். நன்கு கொதி வந்ததும் பீட்ரூட் எடுத்து அதன் தோலை மட்டும் எடுத்து சேர்க்கவும். தண்ணீர் அரை டம்ளர் ஆகும் வரை கொதிக்க விடவும். இதை இறக்கி வைத்து விடவும். அடுத்து மற்றொரு கடாய் எடுத்து கறிவேப்பிலை, வெந்தயம், கருஞ்சீரகம், கடுகு, கடைசியாக டீ தூள் பவுடர் சேர்த்து வறுக்க வேண்டும். நன்கு கருப்பாக வந்ததும் அதை எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும். ஆறிய பின் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும்.  இதை தட்டில் மாற்றி எடுத்துக் கொள்ளவும். இப்போது ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள செம்பருத்தி பூ கலவையை வடிகட்டி எடுக்கவும். 

இப்போது, ஒரு தட்டு எடுத்து அதில் அரைத்த பொருட்களை தேவையான அளவு போட்டு அதன் மேல் செம்பருத்தி பூ ஜெல் சேர்க்கவும். அவ்வளவு தான் நன்கு கலக்கி விடவும். கரு கருப்பான இயற்கை முறை ஹேர் டை ரெடி.  எண்ணெய் தேய்காமல் இதை முடியில் அப்ளை செய்து 1 மணி நேரம் விட்டு சாம்பு எதுவும் போடாமல் வெதுவெதுப்பான நீரில் கழிவு விட்டால்  ஹேர் டை  செட்டாகி விடும். 

Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: