முடி அசுர வேகத்தில் வளரும்… இயற்கையான ஷாம்பூ இப்படி செய்து யூஸ் பண்ணுங்க!
தலைமுடி சரியாக வளரவில்லை என்று கவலைப்படுகிறவர்களுக்கு, கவலையை விடுங்கள். இயற்கையான ஷாம்பூ இப்படி செய்து பயண்படுத்தி பாருங்கள், முடி அசுர வேகத்தில் வளர்வதைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள்.
தலைமுடி சரியாக வளரவில்லை என்று கவலைப்படுகிறவர்களுக்கு, கவலையை விடுங்கள். இயற்கையான ஷாம்பூ இப்படி செய்து பயண்படுத்தி பாருங்கள், முடி அசுர வேகத்தில் வளர்வதைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள்.
இயற்கை முறையிலான இந்த ஷாம்பூவை நளினி மாணிக் குக்கிங் (@nalinimanickcooking) என்ற யூடியூப் சேனலில் செய்து காட்டியுள்ளனர். நாம் இப்போது, இந்த இயற்கையான ஷாம்பூவை எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.
ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும் பலருக்கும் தலைக்கு மேல் உள்ள பிரச்னைதான் பெரிய பிரச்னை. அதுதான் தலைமுடி. தலைமுடி உதிர்ந்தால் கவலை, தலைமுடி நரைத்தால் கவலை, தலைமுடி சரியாக வளரவில்லை என்றால் கவலை இப்படி நிறைய கவலைப்படுகிறவர்களுக்கு, உங்கள் கவலையை விடுங்கள். இயற்கையான ஷாம்பூ இப்படி செய்து பயண்படுத்தி பாருங்கள், முடி அசுர வேகத்தில் வளர்வதைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள்.
Advertisment
இயற்கை முறையிலான இந்த ஷாம்பூவை நளினி மாணிக் குக்கிங் (@nalinimanickcooking) என்ற யூடியூப் சேனலில் செய்து காட்டியுள்ளனர். நாம் இப்போது, இந்த இயற்கையான ஷாம்பூவை எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.
பலருக்கும் ஹேர் பேக், ஹேர் மாஸ்க் போட நேரமில்லை என்கிறார்கள், அவர்கள் இதைமட்டும் செய்யுங்கள். முதலில் சோற்றுக் கற்றாழை ஜெல்லை தனியாக எடுத்துக்கொள்ளுங்கள். இதை மிக்ஸி ஜாரில் போடுங்கள். அதனுடன் 2 கொத்து கருவேப்பிலை போடுங்கள், 4-5 செம்பருத்தி பூக்களைப் போடுங்கள். தண்ணீர் ஊற்றாமல் விழுது போல அரைத்துக்கொள்ளுங்கள். முன் தின நாள் இரவே 10-12 பூந்திக் கொட்டைகளை தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த நாள், அந்தக் கொட்டையை எடுத்துவிட்டு, அந்த தண்ணீரை மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்போது நாம் அரைத்த அந்த விழுதையும் சேர்த்து அரைத்தால், இயற்கையான ஹெர்பல் சாம்பு தயார். இதை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி ஃபிரிட்ஜில் ஸ்டோர் பண்ணி வைத்து பயன்படுத்தலாம்.
Advertisment
Advertisements
இந்த மாதிரியான இயற்கையான ஷாம்பூ பயன்படுத்தும்போது, முடி நீளமாக அசுர வேகத்தில் வளரும், முடியும் கருகருவென இருக்கும்.