/indian-express-tamil/media/media_files/2024/12/02/v4AH7C9kJAklS1twK1yu.jpg)
நம் நிலத்தில் உள்ள களைச் செடிகளை அகற்றுவது சற்று கடினமான பணி. இதனை அகற்ற கடைகளில் இருந்து செயற்கையான களைக்கொல்லிகளை வாங்கி பயன்படுத்துவார்கள் இதன் விலை ஒரு லிட்டர் சுமார் ரூ. 700 வரை விற்கப்படுகிறது. இவற்றை பயன்படுத்துவதால் மண்ணின் வளமும் மாறுபடுகிறது. இந்நிலையில், இயற்கையான முறையில் களைகொல்லி எப்படி செய்வது என இப்பதிவில் பார்க்கலாம்.
இதற்கு தேவையான பொருள்கள் 2 பாக்கெட் கல் உப்பு, 2 எலுமிச்சை, மாட்டு கோமியம். ஒரு வாளியில் கல் உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் சுமார் 15 லிட்டர் அளவிற்கு மாட்டு கோமியம் சேர்த்து கலக்க வேண்டும். மாட்டுக் கோமியம் பயன்படுத்தினால் இதன் வீரியம் அதிகமாக இருக்கும்.
இவ்வாறு கலக்கிய கலவையை, நம் நிலத்தில் உள்ள களைச்செடிகள் மீது தெளிக்க வேண்டும். குறிப்பாக, இதனை தெளிப்பதற்கு முந்தைய நாள், களைச்செடிகளுக்கு தண்ணீர் பாய்த்திருக்க வேண்டும். களைகொல்லி தெளித்த அடுத்த 5 நாள்களுக்கு தண்ணீர் பாய்க்க கூடாது.
இவ்வாறு செய்தால் இரண்டு நாள்களில் களைச்செடிகள் செத்துவிடும். இதை பயன்படுத்துவதால் மண்ணின் வளமும் கெடாமல் இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.