பார்லர் விட இதுதான் பெஸ்ட்: கெமிக்கல் இல்லாத இயற்கையான கெரட்டின் ட்ரீட்மென்ட் வீட்டிலேயே இப்படி பண்ணுங்க

எந்தவித ரசாயனங்களும் இல்லாமல், இயற்கையான பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே கெரட்டின் சிகிச்சையைச் செய்யலாம். இது செலவு குறைவு மட்டுமல்ல, பக்கவிளைவுகள் இல்லாத ஒரு பாதுகாப்பான தீர்வும் கூட.

எந்தவித ரசாயனங்களும் இல்லாமல், இயற்கையான பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே கெரட்டின் சிகிச்சையைச் செய்யலாம். இது செலவு குறைவு மட்டுமல்ல, பக்கவிளைவுகள் இல்லாத ஒரு பாதுகாப்பான தீர்வும் கூட.

author-image
WebDesk
New Update
Okra hair Natural keratin Hair straightening Home remedy

Okra hair Natural keratin Hair straightening Home remedy

சலூன் அல்லது ஸ்பாவில் கிடைக்கும் அதே மென்மை, பளபளப்பு, மற்றும் ஆரோக்கியமான கூந்தல் இப்போது வீட்டிலேயே சாத்தியம். ரசாயனங்கள் இல்லாததால், முடி உதிர்வு, வறட்சி, மற்றும் பிற கூந்தல் பிரச்சனைகள் வராது. வீட்டிலேயே 100% இயற்கையான, ரசாயனங்கள் இல்லாத கேரட்டின் சிகிச்சையை எப்படி செய்வது என்று இந்த வீடியோவில் கூறுகிறார் டாக்டர் விவேக் ஜோஷி. 

Advertisment

ஏன் கெமிக்கல் கேரட்டின் வேண்டாம்?
 
கூந்தலின் ஆரோக்கியத்திற்காக கேரட்டின் சிகிச்சை செய்வது வழக்கம். நமது முடி புரதத்தால் ஆனது, எனவே கேரட்டின் சிகிச்சை செய்வது நல்லது என கூறப்படுகிறது. ஆனால், கெமிக்கல் கேரட்டின் சிகிச்சைக்குப் பிறகு முடி உதிர்வு, பிசுபிசுப்பான கூந்தல் போன்ற பிரச்சனைகள் வருவதாக பலர் கூறுகின்றனர். ரசாயனங்கள் அடங்கிய இந்த சிகிச்சை தலைமுடிக்கு நல்லது என்றால், ஏன் அதை உச்சந்தலையில் (Scalp) தடவுவதில்லை? ஏனென்றால், அந்த ரசாயனங்கள் உச்சந்தலையில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். இந்த ரசாயனங்களின் கடுமையான வாசனையே அவை எவ்வளவு ஆபத்தானவை என்பதைக் காட்டுகிறது.

தேவையான பொருட்கள்

Advertisment
Advertisements

வீட்டில் கிடைக்கும் இந்த எளிய பொருட்களைப் பயன்படுத்தி, உங்கள் தலைமுடிக்கு ஆரோக்கியமான கேரட்டின் பேஸ்ட்டை தயார் செய்யலாம்.

அரிசி - 2 டேபிள்ஸ்பூன்
ஆளி விதை- 2 டேபிள்ஸ்பூன்
கற்றாழை ஜெல்- 1 டீஸ்பூன்
தண்ணீர்

செய்முறை

முதலில், 2 டேபிள்ஸ்பூன் அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். அரிசி நன்றாக வெந்த பிறகு, அதனுடன் சிறிதளவு தண்ணீர் இருக்கும் நிலையில் அடுப்பை அணைத்துவிட வேண்டும். தண்ணீரை முழுவதுமாக வற்ற விடக்கூடாது.

அடுத்து, மற்றொரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் ஆளி விதைகளை எடுத்து, ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து, கொதிக்க விட வேண்டும். ஆளி விதைகள் கொதித்து, ஒரு கெட்டியான ஜெல் போன்ற பதம் வரும் வரை கொதிக்கவிடவும்.

ஆளி விதை ஜெல் தயாரானதும், அதை ஒரு துணியின் உதவியுடன் பிழிந்து, ஜெல்லை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது சற்று கடினமான வேலைதான். ஆனால், பொறுமையாகச் செய்தால் ஜெல்லை முழுவதுமாகப் பிரித்து எடுக்கலாம்.

இப்போது, தயாராக இருக்கும் அரிசி மற்றும் ஆளி விதை ஜெல்லை ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஒரு நிமிடம் அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கிளற வேண்டும். இது இரண்டும் நன்றாக ஒன்றுடன் ஒன்று கலப்பதற்கு உதவும்.

இந்த கலவை சிறிது ஆறியதும், அதனுடன் ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

இறுதியாக, இந்த கலவையை மிக்ஸியில் போட்டு, கெட்டியான, மென்மையான பேஸ்ட்டாக அரைத்து எடுக்க வேண்டும். இப்போது, கெமிக்கல் இல்லாத இயற்கையான கெரட்டின் பேஸ்ட் தயாராகிவிட்டது.

எப்படி பயன்படுத்துவது?

Hair mask

முதலில், உங்கள் தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். தேவைப்பட்டால், நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் ஷாம்பூவை பயன்படுத்திக்கொள்ளலாம். வெதுவெதுப்பான நீர் முடியின் கியூட்டிக்கிள்களைத் திறந்து, இந்த பேஸ்ட் உள்ளே ஊடுருவ உதவும்.

இந்த பேஸ்ட்டை முடியின் வேரில் இருந்து நுனி வரை நன்றாகத் தடவ வேண்டும். எல்லா முடிகளிலும் பரவுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பேஸ்ட் தடவிய பிறகு, தலைமுடியை சிக்கலாக முடிந்து கொள்ளாமல், ஒரு ஷவர் கேப்பால் மூடி, 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும்.

30 நிமிடங்களுக்குப் பிறகு, வெதுவெதுப்பான நீரில் உங்கள் தலைமுடியை நன்றாக அலசி, வழக்கம் போல உலரவிட வேண்டும்.

இந்த சிகிச்சையை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்யலாம். ஒவ்வொரு முறையும் ஃப்ரெஷாகத் தயாரித்து உபயோகிப்பது நல்லது. இதைச் செய்த பிறகு, உங்கள் கூந்தலில் ஏற்படும் மென்மையையும், பளபளப்பையும் நீங்களே உணர்வீர்கள். ரசாயனங்கள் பயன்படுத்தாத இந்த இயற்கையான கெரட்டின் ட்ரீட்மென்ட்டை நீங்களும் செய்து பார்த்து உங்கள் அனுபவங்களை கமென்டில் பகிருங்கள்!

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: