மஞ்சளில் வேப்ப எண்ணெய் சேர்த்து இந்த இலையில் தடவுங்க… கொசுக்கள் தூர ஓடிடும்!
வீட்டில் இருக்கும் கொசு தொல்லையை எவ்வாறு இயற்கையான முறையில் போக்கலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதற்காக, மஞ்சள், வேப்ப எண்ணெய், பிரிஞ்சி இலை உள்ளிட்ட பொருட்கள் மட்டும் போதும்.
வீட்டில் இருக்கும் கொசு தொல்லையை எவ்வாறு இயற்கையான முறையில் போக்கலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதற்காக, மஞ்சள், வேப்ப எண்ணெய், பிரிஞ்சி இலை உள்ளிட்ட பொருட்கள் மட்டும் போதும்.
வெயில், மழை என எந்தக் காலமாக இருந்தாலும் கொசுக்களின் தொல்லை அதிகமாக இருக்கும். இவ்வாறு கொசுக்களின் தொல்லை அதிகரிப்பதால் இரவில் நிம்மதியாக உறங்குவதற்கு பெரும் சிரமமாக இருக்கும்.
Advertisment
இது தவிர டெங்கு போன்ற கொடிய நோய்களையும் கொசுக்கள் பரப்புவதால் மனிதர்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. அதன்படி, கொசுக்களை விரட்டுவதற்காக செயற்கையான பொருட்களை பலர் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், இந்த செயற்கையான பொருட்களில் இருந்து வெளியாகும் புகையை சுவாசிக்கும் போது, அந்த வீட்டில் இருப்பவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இதனை தடுப்பதற்கு வீட்டில் இருக்கும் சிம்பிளான பொருட்கள் கொண்டு இயற்கையான கொசு விரட்டியை தயாரிக்கலாம்.
இதற்காக, சிறிய பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள் எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் சிறிதளவு வேப்ப எண்ணெய் சேர்த்து கலக்க வேண்டும். வீட்டில் வேப்ப எண்ணெய் இல்லாதவர்கள் நல்லெண்ணெய் அல்லது கடுகு எண்ணெய்யை பயன்படுத்தலாம்.
Advertisment
Advertisements
இப்போது, மூன்று பிரிஞ்சு இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இலையின் இரு புறமும், முதலில் தயாரித்து வைத்திருந்த கலவையை நன்றாக தடவிக் கொள்ளலாம். இப்போது, பழைய கப்பில் சிறிதளவு பூண்டு தோல் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதே கப்பில் மஞ்சள் தடவி வைத்திருந்த பிரிஞ்சி இலைகளை சிறிய துண்டுகளாக கிழித்து போட வேண்டும். இதற்கு மேல் சிறிதளவு கற்பூரத்தை பொடியாக்கி போட வேண்டும். இவ்வாறு செய்தால் இயற்கையான கொசு விரட்டி தயாராகி விடும்.
இதில் நெருப்பை பற்ற வைத்து கொசு அதிகமாக இருக்கும் இடங்களில் வைத்து விடலாம். இப்படி செய்யும் போது வீட்டில் ஒரு கொசு கூட இருக்காது. மேலும், இந்தப் புகையை சுவாசிப்பதால் எந்த விதமான பிரச்சனையும் ஏற்படாது.