சுட்டெரிக்கும் வெயில்... வெடிக்கும் வியர்வை கொப்பளம்; இயற்கை தீர்வு இதுதான்: சொல்லும் டாக்டர் அருண்குமார்
கோடை காலத்தில் அதிகப்படியாக ஏற்படும் வியர்வை கொப்பளங்களை எவ்வாறு இயற்கையான முறையில் குணப்படுத்தலாம் என்று மருத்துவர் அருண் குமார் விளக்கம் அளித்துள்ளார். அதனை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
கோடை காலத்தில் அதிகப்படியாக ஏற்படும் வியர்வை கொப்பளங்களை எவ்வாறு இயற்கையான முறையில் குணப்படுத்தலாம் என்று மருத்துவர் அருண் குமார் விளக்கம் அளித்துள்ளார். அதனை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
கோடை காலம் வந்தாலே வியர்வை கொப்பளங்களின் பாதிப்பு அதிகமாக இருக்கும். இவற்றில் இருந்து எவ்வாறு நம்மை தற்காத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.
Advertisment
அவர் கூறுகையில், நம் சருமத்தில் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. இந்த வியர்வைச் சுரப்பிகளில் அடைப்பு நேர்வதால் வியர்க்குரு உண்டாகிறது. கோடை காலத்தில் இயற்கையாகவே வியர்வை அதிகமாகச் சுரக்கும். இந்த நிலையில் சருமம் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் சில தொந்தரவுகள் ஏற்படும். வியர்வை வெளியேற முடியாமல் அதன் பாதைகள் வீங்கும்போது வியர்வை கொப்பளம் உருவாகிறது.
இதற்கு நிவாரணம் அளிப்பதாக சில பவுடர் தயாரிப்பு நிறுவனங்கள் விளம்பரம் செய்கின்றன. பொதுவாக பவுடரில் டால்க் என்னும் பொருள் உள்ளது. இதோடு ஸின்க் ஆக்சைடும் சேர்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த பவுடர்களில் கேம்போர் மற்றும் மென்தால் ஆகியவை சேர்க்கப்படுவதால், அவை குளிர்ச்சியாக இருக்கின்றன.
ஆனால், இது போன்ற பவுடர்கள் வியர்வை கொப்பளத்தை குணப்படுத்துவதில்லை என்று மருத்துவர் அருண் குமார் கூறியுள்ளார். மாறாக, அவை வியர்வையை உறிஞ்சும் வேலையைச் செய்கின்றன. இவற்றை அதிகமாகப் பயன்படுத்தும்போது, வியர்வைச் சுரப்பிகளில் மேலும் அடைப்பு உண்டாக வாய்ப்புள்ளது.
Advertisment
Advertisements
ஆகையால், வியர்வை கொப்பளத்திற்கு இயற்கையான தீர்வு காண கற்றாழையைப் பயன்படுத்தலாம் என்று மருத்துவர் அருண் குமார் அறிவுறுத்தியுள்ளார். ஆகவே, வியர்வை கொப்பளம் உள்ள இடத்தில் கற்றாழை ஜெல்லை சுத்தமாகக் கழுவி தடவலாம். மேலும், பாக்டீரியா தொற்றுகளில் இருந்து பாதுகாக்க ஒரு நாளைக்கு இருமுறை குளிக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.
மேலும், ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தண்ணீர் அருந்தலாம். கோடை காலத்தில் லேசான பருத்தி ஆடைகளை அணிவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். வியர்வை கொப்பளத்திற்கு பவுடர்கள் தீர்வாகாது என்பதால், மருத்துவர்கள் அவற்றை பரிந்துரைப்பதில்லை என்று அருண் குமார் தெரிவித்துள்ளார். அதோடு, வியர்வை கொப்பளத்தின் தாக்கம் மிக அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறலாம் என்று என்று அவர் வலியுறுத்துகிறார்.
நன்றி - Doctor Arunkumar Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.