Navratri 2023: ஒன்பது நாட்களும் என்னென்ன கோலங்கள் இடலாம்?

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் என்னென்ன கோலங்கள் இட வேண்டும் என ஆச்சார்யப் பெருமக்கள் கூறியுள்ளனர்.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் என்னென்ன கோலங்கள் இட வேண்டும் என ஆச்சார்யப் பெருமக்கள் கூறியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Navratri 2023 Kolangal

Navratri 2023 Kolangal

நவராத்திரியின் முதல் 3 நாட்கள் சக்தியை, துர்கை அம்சமாக வழிபடச் சொல்கிறது சாஸ்திரம். அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியின் அம்சமாகக் கொண்டு வழிபட வேண்டும். கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியின் அம்சமாகக் கொண்டாட வேண்டும்.

Advertisment

இந்தாண்டு (2023) நவராத்திரி பண்டிகை அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி தொடங்குகிறது.

நவராத்திரியின் ஒன்பது நாளும் ஒவ்வொரு விதமான கோலங்களை இடுவது விசேஷம். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் என்னென்ன கோலங்கள் இட வேண்டும் என ஆச்சார்யப் பெருமக்கள் கூறியுள்ளனர்.

முதல் நாள் அரிசி மாவு - பொட்டுக் கோலம்

இரண்டாம் நாள் கோதுமை மாவு - கட்டம் கொண்ட கோலம்

மூன்றாம் நாள் முத்துகள் போன்ற மலர்க்கோலம்

நான்காம் நாள் அட்சதைகளாலான படிக்கட்டுக் கோலம்

ஐந்தாம் நாள் கடலை கொண்டு பறவையினக் கோலம்

ஆறாம் நாள் பருப்பு கொண்டு தேவி நாமம் கொண்ட கோலம்

ஏழாம் நாள் திட்டாணி எனப்படும் வெள்ளை மலர்களால் ஆன கோலம்

எட்டாம் நாள் காசுகளாலான பத்மம் (தாமரைக் கோலம்)

ஒன்பதாம் நாள் கற்பூரம் ஆயுதம் (வாசனைப் பொடிகளை கலந்து கோலமிடுவது விசேஷம்)

Advertisment
Advertisements

நவராத்திரியில் கொலு வைப்பவர்கள் மட்டுமல்லாமல் யார் வேண்டுமானாலும் இந்தக் கோலங்களை இடலாம். அம்பாளை வழிபடலாம்.

பிரபல கிராமிய பாடகி அனிதா குப்புசாமி தனது யூடியூப் வீடியோவில் நவராத்திரி அன்று போட வேண்டிய கோலங்கள் குறித்து தெளிவாகக் கூறியுள்ளார்.

அந்த வீடியோ

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: