Advertisment

லவ்வோ லவ்வு... விருதை விக்னேஷ் சிவன் கையில் கொடுத்து அழகு பார்த்த நயன்!

“அவள், அவளுக்கு கிடைத்த விருதுடன்.. நான் என் விருதுடன் என்று நயன் தாராவை” சுட்டிக் காட்டியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
nayanthara

nayanthara

அறம் படத்திற்காக 2 விருதுகளை அள்ளிய நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனிடம் உடனே செல்ஃபீ எடுத்து பதிவிட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

பிரபல தனியார் தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று(43.6.18) நடைபெற்றது. பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் நடிகை நயன்தாராவிற்கு 2 விருதுகள் வழங்கப்பட்டன. அறம் படத்தில் நடித்ததிற்காகவும், ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை என்ற விருதும் நயனுக்கு நடிகர் கார்த்திக் வழங்கினார்.

ரசிகர்களிடம் ஆல் டைம் ஃபேவரெட் நடிகையாக இருக்கும் நயன்தாரா இப்போது விக்னேஷ் சிவனை காதலித்து வருவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. வெளிப்படையாக இருவரும் அறிவிக்கவில்லை என்றாலும் இவர்கள் பதிவிடும் ஃபோட்டோக்கள், ஸ்டேட்டஸ், ட்ரெஸிங் கோட் என ஏகப்பட்ட காரணங்களை வைத்து இவர்கள் இருவரும் காதலிப்பது உறுதியானது.

பொதுவாகவே பிரபல நடிகை காதலிப்பது தெரிந்தால் அதை ரசிகர்கள் பலரும் பலவகையாக விமர்சிப்பார்கள். தீவிர ரசிர்கள் என்றால் லைட்டாக பொறாமஒ கூட படுவார்கள். ஆனால், விக்னேஷ் - நயன் விஷயத்தில் இது எதிர்மறையாக அமைந்துள்ளது. இவர்களின் ஜோடியை பலரும் ரசித்து லைக்ஸ்களை அளித்து குவித்துவிடுகின்றன.

இந்நிலையில், அறம் படத்திற்காக விருது பெற்ற நயனை, விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் அவருக்கு வாழ்த்துக் கூறியுள்ளார். அதில் நயன்தாரா படத்திற்காக பெற்ற விருதுடன் விக்னேஷ் அருகில் நிற்கிறார். அதற்கு விக்னேஷ் அளவில்லாத லவ்வில், “அவள், அவளுக்கு கிடைத்த விருதுடன்.. நான் என் விருதுடன் என்று நயன் தாராவை” சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் காலை முதலே வைரலாக பரவி வருகிறது.

Nayanthara Vignesh Sivan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment