Advertisment

எங்க ரெண்டு பேருக்கும் இருக்கிற புரிதலுக்கு முக்கிய காரணம் இதுதான்: மனம் திறந்த நீலிமா

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அருகில் இருக்கும் ஃபிஜீ தீவில் தான் இந்த படம் எடுக்கப்பட்டது. 55 நாட்கள் ஷூட்டிங். 55 பேரை இங்கிருந்து அழைத்துச் சென்று ஷூட்டிங் எடுத்தனர். இதில் கிட்டத்தட்ட 4.50 கோடி ரூபாய் செலவானது.

author-image
WebDesk
New Update
Neelima Rani

Neelima Rani

பிரபல சின்னத்திரை நடிகை நீலிமா. நிறைய படங்களிலும் நடித்திருக்கிறார்.
‘6 வயதில் தேவர் மகன் படத்தில் நடித்து நீலிமா தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார். 19 வயதில், பிரியசகி படத்தில் நடிக்க, இயக்குனர் இசைவாணன் நீலிமாவை அணுகியுள்ளார். அதனால், தான் ஹீரோயினாக அறிமுகமாக வேண்டிய தெலுங்கு சீரியலை கைவிட்டார். ஆனால் அந்த படம் சரியாக நடக்கவில்லை.
அப்போதுதான் நீலிமா வாழ்க்கையில் இசைவாணன் வந்தார்
நீலிமாவுக்கு தன்னால்தான் தெலுங்கு சீரியல் வாய்ப்பு கைகூடாமல் போய்விட்டது, பிரியசகி படத்திலும் ஒன்றும் நடக்கவில்லை என்ற குற்ற உணர்வு அவருக்கு இருந்தது.  இருவருக்கும் இடையில் நட்பு மலர்ந்தது. இந்த நட்பு இரண்டு ஆண்டுகளிலேயே காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். 
நீலிமாவுக்கு 19 வயது, இசைவாணனனுக்கு 29 வயது. இருவருக்கும் 10 வயது வித்தியாசம்.
நீலிமா தன்னுடைய பெற்றோருக்கு சொல்லி புரியவைத்து, இசைவாணனை 2008ல் கரம்பிடித்தார். 

Advertisment


இதற்கிடையே, 2011ஆம் ஆண்டு, இந்த தம்பதி படம் தயாரிக்க நினைத்தனர்.
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அருகில் இருக்கும் ஃபிஜீ தீவில் தான் இந்த படம் எடுக்கப்பட்டது. 55 நாட்கள் ஷூட்டிங். 55 பேரை இங்கிருந்து அழைத்துச் சென்று ஷூட்டிங் எடுத்தனர். இதில் கிட்டத்தட்ட 4.50 கோடி ரூபாய் செலவானது. ஆனால் ஒரு சில நண்பர்கள் முதுகில் குத்தியதால், அந்த படத்தை இவர்களால் வெளியிட முடியவில்லை.
4.50 கோடி ரூபாய் பணம், வீடு எல்லாம் போனது. நீலிமாவிடம் வெறும் தாளி செயின் மட்டுமே இருந்தது. அவர்களிடம் வாடகைக்கு வீடு எடுக்கக் கூட பணமில்லை.
அப்போதுதான் இருவரும், இசைவாணன் நண்பர் வீட்டுக்கு சென்று அங்கு தங்கினர். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சம்பாதிக்க ஆரம்பித்து, வாடகை வீட்டில் தங்கி, அந்த வீட்டையே வாங்கினர்.
இந்த கடனிலிருந்து வெளியே வர கிட்டத்தட்ட 3,4 வருடங்கள் ஆகிவிட்டது. நீலிமா தொடர்ந்து நிறைய சீரியல்களில் நடித்தார். எப்படி கணவர் தன்னை புரிந்து கொண்டாரோ, அதே அளவுக்கு நீலிமாவும் தன் கணவனை புரிந்து வைத்திருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Neelima Rani (@neelimaesai) இந்நிலையில் திருமணம் குறித்து நீலிமா ராணி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசுகையில், "எனது கணவர் இசைவாணனை எனக்கு கடந்த 20 வருடங்களாக தெரியும். எனக்கு அனைத்தையும் கற்றுக்கொடுத்தது அவர்தான். எங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் புரிதலுக்கான முக்கிய காரணம் வயது வித்தியாசம்தான். 10 வயது வித்தியாசம் இருந்தால் வயதில் மூத்தவர் என்று சொல்கிறார்கள். 
ஆனால் உண்மையில் அந்த வயது வித்தியாசம் இருப்பதால் ஒருவர் பக்குவமாகவும், இன்னொருவர் அரைகுறையாவும் இருப்பார். அப்படி இருக்கும்போது அவர்களுக்குள்ளான பேலன்ஸ் ஒர்க் அவுட் ஆகும்.
இரண்டு பேருமே பக்குவமாக இருந்தால் வாழ்க்கை சொதப்பலாக போய்விடும். அதேநேரத்தில் பக்குவமாக இல்லை என்றாலும் சொதப்பலாகத்தான் முடியும். அதனால் கணவன், மனைவிக்குள் வயது வித்தியாசம் இருக்க வேண்டும். திருமணம் செய்து ஒருவருடன் வாழ்வதை இப்போது க்ரிஞ்ச் என்கிறார்கள். அது உண்மையில் தவறான விஷயம்" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment