வேப்ப எண்ணெய் உடன் இதை சேர்த்து தெளிங்க… ரோஜா செடியை விட்டு பூச்சிகள் ஓடிவிடும்!
விவசாயத்தில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் இயற்கையான முறைகளில் வேப்ப எண்ணெய்யும் ஒன்று. இருப்பினும் இதனைத் தகுந்த அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் வேப்ப எண்ணெய்யில் இருக்கும் கசப்புத் தன்மை, ஒருசில செடிகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி விடும். இதனைத் தெரிந்து கொள்ளாமல் வேப்ப எண்ணெயைப் பயன்படுத்தினால், மகசூல் பாதிக்க வாய்ப்புள்ளது. எந்தெந்த செடிகளுக்கு வேப்ப எண்ணெய் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
Advertisment
இயற்கை விவசாயத்தில் வேப்ப மரத்தின் அனைத்துப் பாகங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவ்வகையில் வேப்பங் கொட்டையில் இருந்து தயாரிக்கப்படும் வேப்ப எண்ணெய், இயற்கை பூச்சி விரட்டியாக செயல்படுகிறது. சில விவசாயிகள் வேப்ப எண்ணெயை தயாரித்து விற்பனையும் செய்து வருகின்றனர். இந்நிலையில் வேப்ப எண்ணெயை எந்தெந்த செடிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது; எப்படி பயன்படுத்த வேண்டும் என விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
நன்மைகள்:
பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகளை விரட்டும் தன்மை கொண்டது வேப்ப எண்ணெய். அதோடு சிலந்திப் பூச்சிகள், கம்பளிப் பூச்சிகள், மற்றும் வெள்ளை ஈக்கள் போன்றவற்றின் இனப்பெருக்க சுழற்சியை அடியோடு அழிக்கிறது. பூச்சிவிரட்டியாக செயல்படும் வேப்ப எண்ணெய், பூஞ்சை பண்புகளையும் கொண்டுள்ளது. இலைப்புள்ளி, துரு மற்றும் கரும்புள்ளி போன்ற பூஞ்சை நோய்கள் பயிர்களில் ஏற்படுவதையும் இது தடுக்கிறது.
Advertisment
Advertisements
செயற்கை பூச்சி விரட்டிகள் பாரபட்சமின்றி அனைத்து விதமான பூச்சிகளையும் அழித்து விடும். ஆனால் வேப்ப எண்ணெய் அப்படி அல்ல. தீங்கு செய்யும் பூச்சிகளை அழித்தும், நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதுகாத்தும் பயிர் விளைச்சலை அதிகரிக்க உதவுகிறது. லேடிபக்ஸ், பட்டாம்பூச்சி மற்றும் தேனீக்களை வேப்ப எண்ணெய் தொந்தரவு செய்வதே இல்லை.
பயிர்களின் நோயெதிர்ப்புத் திறனை அதிகரிப்பதில் வேப்ப எண்ணெய் முக்கியப் பங்கு வகிக்கிறது. பயிர்களின் இயற்கையான பாதுகாப்பை மேம்படுத்தி, வலிமையான மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வித்திடுகிறது. அதோடு வேப்ப எண்ணெயில் உள்ள கொழுப்புகளும், ஊட்டச்சத்துகளும் மண்ணின் வளத்தை மேம்படுத்துகின்றன.
செடிகளுக்கு வேப்ப எண்ணெய் தெளிப்பது சிறந்த பாதுகாப்பாக இருக்கும். இது பூச்சிகளை விரட்டுவதோடு செடிகளுக்கு இயற்கையான சத்துக்களையும் கொடுக்கும். எப்படி தயாரிப்பது என்பதை அறிந்துகொள்வோம். ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் சேர்த்து அடனுடன் ஒரு டீஸ்பூன் வேப்ப எண்ணெய், ஷாம்பு (ஏதேனும் ஒரு பிராண்ட்) சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதனை அரை லிட்டர் தண்ணீருடன் கலந்து செடிகளுக்கு தெளிக்கலாம். எண்ணெயுடன் தண்ணீர் ஒட்டாது என்றாலும் சோப்பு சேர்க்கும் போது ஒட்டிவிடும். இப்போது ஸ்ப்ட்ரே பாட்டிலில் சேர்த்து தெளிப்பதன் மூலம் செடிகளில் இருக்கும் பூச்சிகள் அகற்றிவிடலாம்.