ஆரோக்கியமான நீர் உருண்டை, இப்படி செய்யுங்க. செய்வதுன் ஈசிதான்
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி 1 கப்
உப்பு
தேங்காய் தண்ணீர் அரை கப்
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
வத்தல் – 3
கருவேப்பிலை
பெருங்காயம்
துருவிய தேங்காய் கால் கப்
தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூப்
செய்முறை: இட்லி அரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ள வேண்டும். அதில் உப்பு, தேங்காய்த் தண்ணீர் சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, வத்தல், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து கிளரவும். தொடர்ந்து அரைத்த மாவை சேர்த்து கிளரவும். கட்டியாகும் வரை கிளர வேண்டும் கடைசியாக துருவிய தேங்காய் சேர்க்கவும். தொடர்ந்து தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளரவும். இதை கொழுக்கட்டை போன்று பிடித்து கொள்ளவும். ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“