/indian-express-tamil/media/media_files/2025/06/13/zg8TekaftkM61D9p1MeA.jpg)
தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றைப் பறைசாற்றும் வகையில் தூத்துக்குடியில் ஜூன் 13 முதல் 15 ஆம் தேதி வரை 4-வது நெய்தல் கலைத் திருவிழா தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு, செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேற்று (12/06/2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நெய்தல் கலைத் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட மண் சார்ந்த கலைஞர்கள், தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். இந்த விழாவானது மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்.
இந்த விழாவில் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறையாட்டம், குச்சியாட்டம், துடும்பாட்டம், ஜிம்பளா மேளம், பொய்க்கால் குதிரை, கிராமிய நிகழ்ச்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நெய்தல் திருவிழாவின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய உணவு வகைகளை அறிந்து கொள்ளும் வகையில் 20-க்கும் மேற்பட்ட அரங்குகள் மற்றும் நபார்டு சார்பில் 30-க்கும் மேற்பட்ட காட்சிப்படுத்தப்பட உள்ளது.
முதல் நாளான ஜூன் 13-ம் தேதி தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளி சார்பில் நிகழ்ச்சி தொடக்க விழா, மங்கல இசை நிகழ்ச்சி , சார்பில் அபிநயா நிருத்தாலய நடன பள்ளியின் சமர் கலைக்குழு சார்பில் பரதநாட்டியம்.
பால் ஜேக்கப்பின் ஃபங்கி போதியின் சென்னை சங்கமத்தின் (2025) தொடக்க விழா இசை. சோல்டவுட் இசைக்குழுவின் ஒளி இசை நிகழ்ச்சி ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.