நெல்லியம்பதி என்பது பாலக்காட்டில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் தேயிலை மற்றும் காப்பி தோட்டங்களால் சூழப்பட்ட ஒரு மலைப்பகுதி ஆகும். நெல்லியம்பதி, நின்மாறவில் இருந்து பனி மூட்டமும், மேகக் கூட்டங்களும் நிறைந்த நெல்லியம்பதி மலைப் பிரதேசத்தைக் கண்டு ரசிப்பதே கண்கொள்ளாக் காட்சியாகத் தான் இருக்கும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 467 மீட்டர் முதல் 1,572 மீட்டர் வரை உயரத்தில் உள்ள நெல்லியம்பதிச் சென்றடை நின்மாறவில் இருந்து பாத்துண்டி அணை நோக்கி செல்லும் சாலை எளிதானது. மலைக் காட்டின் இருபுறமும் பசுமை நிறைந்த மரங்களை ரசித்த படியும், ஈரத்துளிகளுடன் நனைந்த இலையின் வாசனையும் நம் மனதை சொக்க வைத்திடும்.
நெல்லியம்பதி செல்லும் வழியில் போத்துண்டி அணை
போத்துண்டி அணை 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது இந்தியாவின் பழமையான அணைகளில் ஒன்றாகும். பாலக்காடு மாவட்டத்தில் குடிநீர் மற்றும் நீர் பாசனம் அளிக்கிறது. இந்த அணையின் சிறப்பு அம்சம் இதன் சுவர் ஆகும், இது வெல்லம் மற்றும் சுண்ணாம்பு கலவையுடன் கட்டப்பட்டுள்ளது.
சிதார்குண்டு
நெல்லியம்பதியிலிருந்து 8 கிலோ மீற்றர்கள் தொலையில் அமைந்துள்ள இது ஒரு காட்சிக் கோணப் பகுதியாகும். இந்த இடத்தில்தான் சீதை, ராமன், இலட்சுமணன் ஆகியோர் வனவாசத்தின் போது தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது.
படகிரி
படகிரி வன சிகரம் : ட்ரக்கிங் செல்வதற்கு ஏற்ற இடம். இரவில் கேம்ப் பயர் எனப்படும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்கள் விடிந்த பின்னும் தொடர்கின்றன... யூத் ஸ்பெஷல். இது கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ளது இது நெல்லியம்பதி மலைகளில் மிக உயரமானது என கூறப்படுகின்றது.
நெம்மரா கிராமம்
இந்திய நாட்டில் கேரளா மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். ஏப்ரல் 2 அல்லது 3 முதல் 16ம் நாள் வரையில் நடைபெறும் நெம்மரா விழா விற்கு இந்த ஊர் பிரசித்திபெற்ற இடம் ஆகும்.