வீட்டில் இருக்கும் இந்த பொருள் ஒரு கைப்பிடி போதும்… துணிகளை சாயம் போகாமல் துவைக்கலாம்!

நீங்கள் புதிதாக வாங்கிய துணிகள் சாயம் போகாமல், அவற்றின் நிறம் அப்படியே இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

நீங்கள் புதிதாக வாங்கிய துணிகள் சாயம் போகாமல், அவற்றின் நிறம் அப்படியே இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

author-image
WebDesk
New Update
white clothes stain removal

New Clothes fading prevention

நாம் பொதுவாக புதிய துணிகளை வாங்கியதும், அவற்றை முதல் முறையாக துவைக்கும்போது சாயம் போய்விடுமோ என்ற கவலை இருக்கும். சில துணிகள் முதல் துவைப்பிலேயே தங்கள் பொலிவை இழந்துவிடும். இந்த பயம் இனி வேண்டாம்! உங்கள் புதிய துணிகளின் நிறம் மங்காமல், புதுப்பொலிவு மாறாமல் பாதுகாக்க ஒரு சூப்பர் டிப்ஸ் இதோ!

Advertisment

ஆம், ஒரு கைப்பிடி கல் உப்பு போதும் உங்கள் புதிய துணிகளின் நிறத்தை அப்படியே தக்கவைக்க. 

புதிய துணிகளை முதல் முறையாக அலசும்போது, ஒரு வாளி தண்ணீரில் ஒரு கைப்பிடி கல்லுப்பை சேர்த்து நன்கு கலக்குங்கள். பின்னர், நீங்கள் அலச விரும்பும் துணிகளை அந்த உப்பு நீரில் சுமார் 15-20 நிமிடங்கள் ஊறவையுங்கள். அதன் பிறகு, வழக்கம் போல் துணிகளை அலசி உலர்த்தலாம்.

Advertisment
Advertisements

இந்த முறை உங்கள் துணிகளின் நிறம் மங்காமல் பாதுகாக்க உதவும். கல்லுப்பு, துணிகளில் உள்ள சாயத்தை நிலைநிறுத்த உதவுகிறது. இதனால், துணிகள் பலமுறை துவைத்தாலும் அவற்றின் நிறம் மங்காமல், புதுப்பொலிவுடன் இருக்கும்.

இந்த எளிய குறிப்பை நீங்கள் புதிதாக வாங்கும் ஒவ்வொரு துணிக்கும் முயற்சி செய்து பார்க்கலாம். நிச்சயமாக, இது உங்களுக்கு நல்ல பலனைத் தரும்!

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: