மேலும், தரிசன டிக்கெட் இல்லாமல் திருமலைக்கு வரும் பக்தர்களும் லட்டு பெறும் வசதியும் இந்த புதிய முறையின் கீழ் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்த புதிய வசதி பக்தர்களுக்கு பெரும் வசதியை அளிக்கும் என்றும், லட்டு வாங்குவதற்காக செலவழிக்கும் நேரம் வெகுவாகக் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.