உளுந்து வைத்து செய்யும் இந்த சைடிஷ் மிகவும் ருசியாக இருக்கும் . மேலும் இதில் அதிக புரத சத்து உள்ளது.
தேவையான பொருட்கள்
150 கிராம் உளுந்து
2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
1 டீஸ்பூன் கடுகு
1 டீஸ்பூன் சீரகம்
1 டீஸ்பூன் வெந்தயம்
கால் டீஸ்பூன் இஞ்சி நறுக்கியது
6 பல் பூண்டு
2 பச்சை மிளகாய்
1 பெரிய வெங்காயம்
1 கைபிடி கொத்தமல்லி
1 கை பிடி கருவேப்பிலை
1 டீஸ்பூன் உப்பு ‘
2 தக்காளி
கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்
1 டீஸ்பூன் மிளகாய் தூள்
அரை டீஸ்பூன் சீரகத் தூள்
கால் டீஸ்பூன் பெருங்காயத் தூள்
தண்ணீர்
1 டேபிள் ஸ்பூன் நெய்
அரை ஸ்பூன் மிளகுத் தூள்
செய்முறை: உளுந்தை கழுவி அதை தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, சீரகம், இஞ்சி ஆகியவற்றை சேர்க்கவும். இதை நன்றாக வதக்க வேண்டும். தொடர்ந்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். கொத்தமல்லி, கருவெப்பிலை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து இதில் உப்பு சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து தக்காளி சேர்த்து வதக்கவும். தொடர்ந்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கவும். வேண்டும் என்றால் தண்ணீர் ஊற்றி கொள்ளவும். பச்சை வாசனை போனதும், ஊறவைத்த உளுந்தை சேர்த்து கிளரவும். தொடர்ந்து ஒரு விசில் விட்டு இந்த கலவையை எடுக்கடும். கடைசியாக மிளகு பொடி, நெய் சேர்த்து கிளரவும். புரத சத்து நிறைந்த சைடிஷ் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“