பாசிப் பயிறு வைத்து செய்யப்படும் இந்த தோசையை ஒரு முறை செய்து பாருங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
பாசிப் பயிறு – 2 கப்
சீரகம்- 1
இஞ்சி- சிறிய துண்டு
பச்சை மிளகாய்- 6
உப்பு- தேவையான அளவு
தண்ணீர்
செய்முறை : மிஸ்கியில் பாசிப்பயிறு, இஞ்சி, சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த இந்த கவலையை ஒரு பாத்திரத்தில் மாற்றி, தோசை மாவு பதத்திற்கு கொண்டு வரவும். இந்த மாவை ஒரு 4 மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடானதும் வழக்கம் போல எண்ணெய் தடவி தோசை சுட வேண்டும். சுவையான பெசரட் தோசை ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“